புறநானூறு - 309. என்னைகண் அதுவே!
பாடியவர்: மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
திணை: தும்பை
துறை : நூழிலாட்டு
இரும்புமுகம் சிதைய நூறி, ஒன்னார் இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே; நல்லரா உறையும் புற்றம் போலவும், கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும், மாற்றருந் துப்பின் மாற்றோர், பாசறை |
5 |
உளன் என வெரூஉம் ஓர்ஒளி வலன்உயர் நெடுவேல் என்னைகண் ணதுவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 307 | 308 | 309 | 310 | 311 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 309. என்னைகண் அதுவே!, என்னைகண், இலக்கியங்கள், போலவும், அதுவே, புறநானூறு, புகழ், படைக்கருவிகள், பாசறையில், மாற்றான், மன்றம், சங்க, எட்டுத்தொகை, பாசறை