முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 220. கலங்கனேன் அல்லனோ!
புறநானூறு - 220. கலங்கனேன் அல்லனோ!
பாடியவர்: பொத்தியார்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
குறிப்பு: சோழன் வடக்கிருந்தான்; அவன்பாற் சென்ற பொத்தியார், அவனால் தடுக்கப்பட்டு உறையூர்க்கு மீண்டார்; சோழன் உயிர் நீத்தான். அவனன்றி
வறி தான உறையூர் மன்றத்தைக் கண்டு இரங்கிப் பொத்தியார் பாடிய செய்யுள் இது.
பெருங்சோறு பயந்து, பல்யாண்டு புரந்த பெருங்களிறு இழந்த பைதற் பாகன் அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை, வெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக், கலங்கினேன் அல்லனோ, யானே-பொலந்தார்த் |
5 |
தேர்வண் கிள்ளி போகிய பேரிசை மூதூர் மன்றங் கண்டே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 218 | 219 | 220 | 221 | 222 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 220. கலங்கனேன் அல்லனோ!, இலக்கியங்கள், அல்லனோ, கலங்கனேன், பொத்தியார், புறநானூறு, பாகன், சோறூட்டியும், இழந்த, பார்க்கும்போது, கண்டு, எட்டுத்தொகை, சோழன், சங்க