புறநானூறு - 221. வைகம் வாரீர்!
பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
குறிப்பு: சோழனது நடுகற்கண்டு பாடிய செய்யுள் இது.
பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே; ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே; அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே; திறவோர் புகழ்ந்த தின்நண் பினனே; மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து; |
5 |
துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்; அனையன் என்னாது, அத்தக் கோனை, நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்த்ன்று; பைதல் ஒக்கல் தழீஇ, அதனை வைகம் வம்மோ; வாய்மொழிப் புலவீர்! |
10 |
நனந்தலை உலகம் அரந்தை தூங்கக், கெடுவில் நல்லிசை சூடி, நடுகல் ஆயினன் புரவலன் எனவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 219 | 220 | 221 | 222 | 223 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 221. வைகம் வாரீர்!, வைகம், இலக்கியங்கள், புகழ்ந்த, புறநானூறு, வாரீர், கொடுத்துக், பெற்ற, அன்பு, கேள்வி, கொடுத்துப், பினனே, எட்டுத்தொகை, சங்க, ஈத்த, மகளிர்