புறநானூறு - 20. மண்ணும் உண்பர்!
பாடியவர்: குறுங்கோழியூர்கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை; மாந்தரஞ் சேரல் எனவும் குறிப்பர்.
திணை: வாகை.
துறை: அரச வாகை.
இரு முந்நீர்க் குட்டமும், வியன் ஞாலத்து அகலமும், வளி வழங்கு திசையும், வறிது நிலைஇய காயமும், என்றாங்கு அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை; |
5 |
அறிவும், ஈரமும், பெருங்க ணோட்டமும்; சோறு படுக்கும் தீயோடு செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது பிறிது தெறல் அறியார் நின் நிழல்வாழ் வோரே; திருவில் அல்லது கொலைவில் அறியார்; |
10 |
நாஞ்சில் அல்லது படையும் அறியார்; திறனறி வயவரொடு தெவ்வர் தேய, அப் பிறர்மண் உண்ணும் செம்மல்; நின் நாட்டு வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது, பகைவர் உண்ணா அருமண் ணினையே; |
15 |
அம்பு துஞ்சும்கடி அரணால், அறம் துஞ்சும் செங்கோலையே; புதுப்புள் வரினும், பழம்புள் போகினும், விதுப்புற அறியா ஏமக் காப்பினை; அனையை ஆகல் மாறே, |
20 |
மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 20. மண்ணும் உண்பர்!, அல்லது, இலக்கியங்கள், அறியார், மண்ணும், தெரியாது, உண்பர், புறநானூறு, பகைவர், அறம், வேறு, பறவைகள், கொலைவில், சூடு, உன்னை, தெறல், சங்க, எட்டுத்தொகை, மாந்தரஞ், சேரல், அளந்து, வாகை, நின்