முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 204. அதனினும் உயர்ந்தது!
புறநானூறு - 204. அதனினும் உயர்ந்தது!
பாடியவர்: கழைதின் யானையார்.
பாடப்பட்டோன்: வல் வில் ஓரி.
திணை:பாடாண்.
துறை: பரிசில்.
ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர், ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று; கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர், கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று; தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல் |
5 |
உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே; ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச், சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும், உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்; புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை |
10 |
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற் புலவேன் வாழியர், ஓரி; விசும்பின் கருவி வானம் போல வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 202 | 203 | 204 | 205 | 206 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 204. அதனினும் உயர்ந்தது!, அதனினும், இலக்கியங்கள், புறநானூறு, உயர்ந்தது, சுரக்கும், ஆயினும், நான், நீரை, உயர்ந்தன்று, இருப்பது, இழிந்தன்று, சங்க, எட்டுத்தொகை, பரிசில், இரத்தல், அதன்எதிர், என்றல்