முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 203. இரவலர்க்கு உதவுக!
புறநானூறு - 203. இரவலர்க்கு உதவுக!
பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்
பாடப்பட்டோன்: சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி
திணை:பாடாண்
துறை:பரிசில்
கழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும் தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும், எல்லா உயிர்க்கும் இல்லால், வாழ்க்கை; இன்னும் தம்மென எம்ம்னோர் இரப்பின், முன்னும் கொண்டிர்என, நும்மனோர் மறுத்தல் |
5 |
இன்னாது அம்ம; இயல்தேர் அண்ணல்! இல்லது நிரப்பல் ஆற்றா தோரினும், உள்ளி வருநர் நசையிழப் போரே; அனையையும் அல்லை, நீயே; ஒன்னார் ஆர்எயில் அவர்கட்கு ஆகவும்,`நுமது` எனப் |
10 |
பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்! பூண்கடன், எந்தை! நீஇரவலர் புரவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 201 | 202 | 203 | 204 | 205 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 203. இரவலர்க்கு உதவுக!, இலக்கியங்கள், உதவுக, இரவலர்க்கு, புறநானூறு, நீயே, துன்பம், மறுத்தல், பரிசில், சங்க, எட்டுத்தொகை, வாழ்க்கை