முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 202. கைவண் பாரி மகளிர்!
புறநானூறு - 202. கைவண் பாரி மகளிர்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: இருங்கோவேள்.
திணை:பாடாண்.
துறை: பரிசில்.
குறிப்பு: இருங்கோவேள் பாரி மகளிரைக் கொள்ளானாக, அப்போது பாடியச் செய்யுள் இது. (கபிலரின் உள்ளம் மிகவும் நொந்து போயின நிலையைச் செய்யுள் காட்டுகின்றது.)
வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக், கட்சி காணாக் கடமா நல்லேறு கடறுமணி கிளரச், சிதறுபொன் மிளிரக், கடிய கதழும் நெடுவரைப் படப்பை வென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி, |
5 |
இருபால் பெயரிய உருகெழு மூதூர்க், கோடிபல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி; நுந்தை தாயம் நிறைவுற எய்திய ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்! |
10 |
நும்போல் அறிவின் நுமருள் ஒருவன் புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை இகழ்ந்ததன் பயனே; இயல்தேர் அண்ணல்! எவ்வி தொல்குடிப் படீஇயர், மற்று,`இவர் கைவண் பாரி மகளிர்` என்றஎன் |
15 |
தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும; விடுத்தனென்; வெலீஇயர், நின் வேலே! அடுக்கத்து அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல் இரும்புலி வரிப்புறம் கடுக்கும் |
20 |
பெருங்கல் வைப்பின் நாடுகிழ வோயே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 200 | 201 | 202 | 203 | 204 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 202. கைவண் பாரி மகளிர்!, பாரி, கைவண், மகளிர், இலக்கியங்கள், இருங்கோவேள், அரசன், செய்யுள், புறநானூறு, பெருங்கல், அரும்பு, எவ்வி, பூக்கள், பேரரையம், அண்ணல், இல்லாமல், சிற்றரையம், மூதூர், உருகெழு, வேட்டுவர், சங்க, எட்டுத்தொகை, நிலை, இருபால், உதவிய, பொருள், பெயரிய, இயல்தேர்