முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 195. எல்லாரும் உவப்பது!
புறநானூறு - 195. எல்லாரும் உவப்பது!
பாடியவர்: நரிவெரூஉத் தலையார்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
பல்சான் றீரே! பல்சான் றீரே! கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள், பயனில் மூப்பின், பல்சான் றீரே! கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன் பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ; |
5 |
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும், அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான் எல்லாரும் உவப்பது ; அன்றியும், நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 193 | 194 | 195 | 196 | 197 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 195. எல்லாரும் உவப்பது!, எல்லாரும், இலக்கியங்கள், உவப்பது, நல்லது, றீரே, ஒருவன், பல்சான், புறநானூறு, நீங்கள், அதுதான், கொண்டிருக்கும், நல்லவர்களே, செய்தல், கணிச்சிக், எட்டுத்தொகை, சங்க, கூர்ம்படைக், கடுந்திறல்