முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 196. குறுமகள் உள்ளிச் செல்வல்!
புறநானூறு - 196. குறுமகள் உள்ளிச் செல்வல்!
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் கடா நிலை.
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும் ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும், ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே; ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது இல்லென மறுத்தலும், இரண்டும், வல்லே; |
5 |
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர் புகழ்குறை படூஉம் வாயில் அத்தை அனைத்தா கியர், இனி; இதுவே எனைத்தும் சேய்த்துக் காணாது கண்டனம் ; அதனால், நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும், |
10 |
வெயிலென முனியேன், பனியென மடியேன், கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை, நாணலது இல்லாக் கற்பின் வாணுதல் மெல்லியல் குறுமகள் உள்ளிச் செல்வல் அத்தை ; சிறக்க, நின் நாளே! |
15 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 194 | 195 | 196 | 197 | 198 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 196. குறுமகள் உள்ளிச் செல்வல்!, இலக்கியங்கள், குறுமகள், மறுத்தலும், உள்ளிச், செல்வல், அத்தை, இரண்டும், செய்ய, புறநானூறு, இல்லை, காலம், அன்றியும், செல்கிறேன், புலவர், அதனால், என்றலும், பாண்டியன், சங்க, எட்டுத்தொகை, பரிசில், ஒல்லுவது, ஒல்லாது, ஒல்லும், இல்லென