முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 192. பெரியோர் சிறியோர்!
புறநானூறு - 192. பெரியோர் சிறியோர்!
பாடியவர்: கணியன் பூங்குன்றன்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ; தீதும் நன்றும் பிறர்தர வாரா ; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ; சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், |
5 |
இன்னா தென்றலும் இலமே; மின்னொடு வானம் தண்துளி தலைஇ, ஆனாது கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் |
10 |
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 190 | 191 | 192 | 193 | 194 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 192. பெரியோர் சிறியோர்!, இலக்கியங்கள், இலமே, புறநானூறு, பெரியோர், சிறியோர், கண்டு, ஒருவன், பெரியோரைக், அன்று, வானம், எட்டுத்தொகை, சங்க, படூஉம், சிறியோரை