முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 190. எலி முயன் றனையர்!
புறநானூறு - 190. எலி முயன் றனையர்!
பாடியவர்: சோழன் நல்லுருத்திரன்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
(வலியுடையோரின் நடப்பை வலியுறுத்திப் பாடிய செய்யுள் இது.)
விளைபதச் சீறிடம் நோக்கி, வளைகதிர் வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும் எலிமுயன் றனைய ராகி, உள்ளதம் வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு இயைந்த கேண்மை இல்லா கியரோ! |
5 |
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென, அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள், பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து, இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும் புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து |
10 |
உரனுடை யாளர் கேண்மையொடு இயைந்த வைகல் உளவா கியரோ! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 188 | 189 | 190 | 191 | 192 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 190. எலி முயன் றனையர்!, நட்பு, இலக்கியங்கள், புறநானூறு, றனையர், முயன், புலி, போன்றோர், வேண்டும், இயைந்த, எட்டுத்தொகை, சங்க, கியரோ