முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 145. அவள் இடர் களைவாய்!
புறநானூறு - 145. அவள் இடர் களைவாய்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை: குறுங்கலி. 'பரணர் பாட்டு' எனவும் கொள்வர்.
மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப் படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக், கடாஅ யானைக் கலிமான் பேக! பசித்தும் வாரோம்; பாரமும் இலமே ; களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ் |
5 |
நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி, அறம்செய் தீமோ, அருள்வெய் யோய்! என, இதியாம் இரந்த பரிசில்: அது இருளின், இனமணி நெடுந்தேர் ஏறி, இன்னாது உறைவி அரும்படர் களைமே! |
10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 143 | 144 | 145 | 146 | 147 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 145. அவள் இடர் களைவாய்!, இலக்கியங்கள், அவள், புறநானூறு, இடர், களைவாய், பாரமும், சங்க, எட்டுத்தொகை