புறநானூறு - 147. எம் பரிசில்!
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை: குறுங்கலி.
கல்முழை அருவிப் பன்மலை நீந்திச், சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக், கார்வான் இன்னுறை தமியள் கேளா, நெருநல் ஒருசிறைப் புலம்புகொண்டு உறையும் அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை |
5 |
நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல் மண்ணூறு மணியின் மாசுஅற மண்ணிப், புதுமலர் கஞல, இன்று பெயரின் அதுமன், எம் பரிசில் ஆவியர் கோவே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 145 | 146 | 147 | 148 | 149 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 147. எம் பரிசில்!, பரிசில், இலக்கியங்கள், இருந்தாள், புறநானூறு, எண்ணெய், வந்துள்ளேன், புதுமலர், சங்க, எட்டுத்தொகை, ஆவியர்