முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 144. தோற்பது நும் குடியே!
புறநானூறு - 144. தோற்பது நும் குடியே!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை: குறுங்கலி.
அருளா யாகலோ கொடிதே; இருள்வரச், சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின் கார்எதிர் கானம் பாடினே மாக, நீல்நறு நெய்தலிற் பொலிந்த உண்கண் கலுழ்ந்து, வார் அரிப் பனி பூண்அகம் நனைப்ப, |
5 |
இனைதல் ஆனா ளாக, இளையோய்! கிளையை மன், எம் கேள்வெய் யோற்கு?என, யாம்தன் தொழுதனம் வினவக், காந்தள் முகைபுரை விரலின் கண்ணீர் துடையா, யாம், அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள்,இனி; |
10 |
எம்போல் ஒருத்தி நலன்நயந்து, என்றும், வரூஉம் என்ப; வயங்கு புகழ்ப் பேகன் ஒல்லென ஒலிக்கும் தேரொடு, முல்லை வேலி, நல்லூ ரானே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 142 | 143 | 144 | 145 | 146 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 144. தோற்பது நும் குடியே!, இலக்கியங்கள், நும், தோற்பது, பேகன், குடியே, புறநானூறு, உறவுக்காரி, அவள், அவர், வேலி, ஒருத்தி, சங்க, எட்டுத்தொகை, தேரொடு