முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 116. குதிரையும் உப்புவண்டியும்!
புறநானூறு - 116. குதிரையும் உப்புவண்டியும்!
பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
தீநீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக் கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல், ஏந்தெழில் மழைக் கண், இன் நகை, மகளிர் புன் மூசு கவலைய முள் முடை வேலிப், பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண், |
5 |
பீரை நாறிய சுரை இவர் மருங்கின், ஈத்திலைக் குப்பை ஏறி உமணர் உப்பு ஓய் ஒழுகை எண்ணுப மாதோ; நோகோ யானே; தேய்கமா காலை! பயில் இருஞ் சிலம்பிற் கலை பாய்ந்து உகளவும், |
10 |
கலையுங் கொள்ளா வாகப்,பலவும் காலம் அன்றியும் மரம் பயம் பகரும் யாணர் அறாஅ வியன்மலை அற்றே அண்ணல் நெடுவரை ஏறித், தந்தை பெரிய நறவின், கூர் வேற் பாரியது |
15 |
அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த வலம் படுதானை வேந்தர் பொலம் படைக் கலிமா எண்ணு வோரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 114 | 115 | 116 | 117 | 118 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 116. குதிரையும் உப்புவண்டியும்!, இலக்கியங்கள், உப்புவண்டியும், உப்பு, புறநானூறு, குதிரையும், ஏறித், இல்லம், முள், பூத்த, எட்டுத்தொகை, சங்க, மகளிர்