புறநானூறு - 114. உயர்ந்தோன் மலை!
பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
சிறப்பு : மன்னனை இழந்ததால் மலையும் வளமிழந்தது என்பது.
ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும்; சிறு வரை சென்று நின் றோர்க்கும் தோன்றும், மன்ற; களிறு மென்று இட்ட கவளம் போல, நறவுப் பிழிந் திட்ட கோதுடைச் சிதறல் வார் அசும்பு ஒழுகு முன்றில், |
5 |
தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 112 | 113 | 114 | 115 | 116 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 114. உயர்ந்தோன் மலை!, இலக்கியங்கள், தோன்றும், உயர்ந்தோன், புறநானூறு, அரசன், பாரி, நறவுநீர், நெடியோன், நின், எட்டுத்தொகை, சங்க, றோர்க்கும்