முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 43. மன்னனின் செல்வ மகிழ்ச்சி
பதிற்றுப்பத்து - 43. மன்னனின் செல்வ மகிழ்ச்சி
துறை : இயல்மொழி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : ஏறா ஏணி
கவரி முச்சி, கார் விரி கூந்தல், ஊசல் மேவல், சேயிழை மகளிர் உரல் போல் பெருங் கால், இலங்கு வாள் மருப்பின், பெருங் கை, மதமாப் புகுதரின், அவற்றுள் விருந்தின் வீழ் பிடி எண்ணு முறை பெறாஅ |
5 |
கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை வட திசை எல்லை இமயம் ஆக, தென்அம் குமரியொடு ஆயிடை அரசர் முரசுடைப் பெருஞ் சமம் ததைய, ஆர்ப்பு எழ, சொல் பல நாட்டைத் தொல் கவின் அழித்த |
10 |
போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ! இரும் பணை திரங்கப் பெரும் பெயல் ஒளிப்ப, குன்று வறம் கூரச் சுடர் சினம் திகழ, அருவி அற்ற பெரு வறற் காலையும், அருஞ் செலல் பேர் ஆற்று இருங் கரை உடைத்து, |
15 |
கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய, வரைவு இல் அதிர்சிலை முழங்கி, பெயல் சிறந்து, ஆர் கலி வானம் தளி சொரிந்தாஅங்கு, உறுவர் ஆர ஓம்பாது உண்டு, நகைவர் ஆர நன் கலம் சிதறி, |
20 |
'ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரற் பாடு விறலியர் பல் பிடி பெறுக! துய் வீ வாகை, நுண் கொடி உழிஞை, வென்றி மேவல், உரு கெழு சிறப்பின், கொண்டி மள்ளர் கொல் களிறு பெறுக! |
25 |
மன்றம் படர்ந்து, மறுகு சிறைப் புக்கு, கண்டி நுண் கோல் கொண்டு, களம் வாழ்த்தும் அகவலன் பெறுக, மாவே!' என்றும், இகல் வினை மேவலை ஆகலின், பகைவரும் தாங்காது புகழ்ந்த, தூங்கு கொளை முழவின், |
30 |
தொலையாக், கற்ப!-நின் நிலை கண்டிகுமே!- நிணம் சுடு புகையொடு கனல் சினம் தவிராது, நிரம்பு அகல்பு அறியா ஏறா ஏணி, நிறைந்து நெடிது இராத் தசும்பின், வயிரியர் உண்டெனத் தவாஅக் கள்ளின் |
35 |
வண் கை வேந்தே! நின் கலி மகிழானே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 41 | 42 | 43 | 44 | 45 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெறுக, நுண், நின், சினம், பெயல், மேவல், பெருங், பிடி, வண்ணம்