முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 45. வென்றிச் சிறப்பு
பதிற்றுப்பத்து - 45. வென்றிச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : ஊன் துவை அடிசில்
பொலம் பூந் தும்பை, பொறி கிளர் தூணி, புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின், ஒசிவுடை வில்லின், ஒசியா நெஞ்சின், களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின், விழுமியோர் துவன்றிய அகல் கண் நாட்பின், |
5 |
எழுமுடி மார்பின் எய்திய சேரல்! குண்டு கண் அகழிய மதில் பல கடந்து, பண்டும் பண்டும் தாம் உள் அழித்து உண்ட நாடு கெழு தாயத்து நனந் தலை அருப்பத்துக் கதவம் காக்கும் கணை எழு அன்ன, |
10 |
நிலம் பெறு திணி தோள் உயர ஓச்சி, பிணம் பிறங்கு அழுவத்து, துணங்கை ஆடி, சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில் ஓடாப் பீடர் உள் வழி இறுத்து, முள் இடுபு அறியா ஏணி, தெவ்வர் |
15 |
சிலை விசை அடக்கிய மூரி வெண் தோல், அனைய பண்பின் தானை மன்னர்- இனி யார் உளரோ, முன்னும் இல்லை- மழை கொளக் குறையாது, புனல் புக நிறையாது, விலங்கு வளி கடவும் துளங்கு இருங் கமஞ் சூல், |
20 |
வயங்கு மணி இமைப்பின் வேல் இடுபு, முழங்கு திரைப் பனிக் கடல் மறுத்திசினோரே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 43 | 44 | 45 | 46 | 47 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - இடுபு, பண்டும், அடிசில், துவை, வண்ணம்