முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 42. கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும்
பதிற்றுப்பத்து - 42. கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : தசும்பு துளங்கு இருக்கை
இரும் பனம்புடையல், ஈகை வான் கழல், மீன் தேர் கொட்பின் பனிக் கயம் மூழ்கிச் சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள் ஊசி நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின், அம்பு சேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது |
5 |
தும்பை சூடாது மலைந்த மாட்சி, அன்னோர் பெரும! நன்னுதல் கணவ! அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ! மைந்துடை நல் அமர்க் கடந்து, வலம் தரீஇ; இஞ்சி வீ விராய பைந் தார் பூட்டி, |
10 |
சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்குஇருக்கை, தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம் ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து; கோடியர் பெருங் கிளை வாழ, ஆடு இயல் உளை அவிர் கலிமாப் பொழிந்தவை எண்ணின்- |
15 |
மன்பதை மருள, அரசு படக் கடந்து, முந்து வினை எதிர் வரப் பெறுதல் காணியர், ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து மான மைந்தரொடு மன்னர் ஏத்த, நின் தேரொடு சுற்றம் உலகு உடன் மூய, |
20 |
மா இருந் தெண் கடல் மலி திரைப் பௌவத்து, வெண் தலைக் குரூஉப் பிசிர் உடைய, தண் பல வரூஉம் புணரியின் பலவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 40 | 41 | 42 | 43 | 44 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கடந்து, நெடு, தசும்பு, வண்ணம், சிறப்பும்