முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 89. மன்னவனது நாடு காவற் சிறப்புக் கூறி,
வாழ்த்துதல்
பதிற்றுப்பத்து - 89. மன்னவனது நாடு காவற் சிறப்புக் கூறி, வாழ்த்துதல்
துறை : காவல் முல்லை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : துவராக் கூந்தல்
வானம் பொழுதொடு சுரப்ப, கானம் தோடு உறு மட மான் ஏறு புணர்ந்து இயல, புள்ளும் மிஞிறும் மாச் சினை ஆர்ப்ப, பழனும் கிழங்கும் மிசையறவு அறியாது, பல் ஆன் நல் நிரை புல் அருந்து உகள, |
5 |
பயம் கடை அறியா வளம் கெழு சிறப்பின் பெரும் பல் யாணர்க் கூலம் கெழும, நன் பல் ஊழி நடுவு நின்று ஒழுக- பல் வேல் இரும் பொறை! நின் கோல் செம்மையின், நாளின் நாளின் நாடு தொழுது ஏத்த, |
10 |
உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ, அரசியல் பிழையாது, செரு மேந்தோன்றி, நோய் இலைஆகியர், நீயே-நின்மாட்டு அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது, கனவினும் பிரியா உறையுளொடு, தண்ணெனத் |
15 |
தகரம் நீவிய துவராக் கூந்தல், வதுவை மகளிர் நோக்கினர், பெயர்ந்து வாழ் நாள் அறியும் வயங்கு சுடர் நோக்கத்து, மீனொடு புரையும் கற்பின், வாள் நுதல் அரிவையொடு காண்வரப் பொலிந்தே! |
20 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 84 | 85 | 86 | 87 | 88 | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அறியாது, நாளின், கூந்தல், துவராக், வண்ணம், நாடு