முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 35. இளவேனிற் பத்து.
ஐங்குறுநூறு - 35. இளவேனிற் பத்து.
இளவேனில் காலத்தில் திரும்பிவிடுவேன் என்று உறுதி கூறிவிட்டுத் தலைவன் பொருளீட்டச் செல்கிறான். இளவேனில் பருவம் வந்தும் தலைவன் திரும்பவில்லை. எனவே தலைவி தன் தோழியிடம் சொல்லித் தலைவி கலங்குகிறாள்.
அவரோ வாரார் தான்வந் தன்றே குயிற்பெடை இன்குரல் அகவ அயிர்க்கேழ் நுண்ணறல் நுடங்கும் பொழுதே. | 341 |
பெண் குயில் தன் இனிய குரலில் பாடுகிறது. ஆற்றில் வரும் தெளிந்த நீரில் நுண்ணிய மணல் படிகிறது. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
அவரோ வாரார் தான்வந் தன்றே சுரும்புகளித்து ஆலும் இருஞ்சினைக் கருங்கால் நுணவம் கமழும் பொழுதே. | 342 |
வண்டுகள் களிப்புடன் தேன் உண்டு பாடுகின்றன. வலிமை மிக்க கிளைகளில் நுணாப் பூ பூத்திக் கமழ்கிறது. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
அவரோ வாரார் தான்வந் தன்றே திணிநிலைக் கோங்கம் பயந்த அணிமிகு கொழுமுகை உடையும் பொழுதே. | 343 |
திணித்துக்கொண்டு கோங்கம் பூ மொட்டு விரிகிறது. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
அவரோ வாரார் தான்வந் தன்றே எழில்தகை இஅள்முலை பொலியப் பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே. | 344 |
மணம் மிக்க குரவம் பூப் பாவைகள் கொய்யும் காலம் வந்துவிட்டது. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
அவரோ வாரார் தான்வந் தன்றே வலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம் மணங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே. | 345 |
அதிரல் பூக்கள் புதிது புதிதாகப் பூத்து ஆற்றின் கன்னங்களாகிய நுண்மணல் படிவில் கொட்டிக் கிடக்ககின்றன. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
அவரோ வாரார் தான்வந் தன்றே அஞ்சினைப் பாதிரி அலர்ந்தெனச் செங்கண இருங்குயில் அறையும் பொழுதே. | 346 |
அழகிய கிளைகளில் பாதிரிப் பூக்கள் பூத்துக் கிடக்கிறது என்று குயில்கள் பாடுகின்றன. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
அவரோ வாரார் தான்வந் தன்றே எழில்தகை இளமுலை பொலியப் பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே. | 347 |
பொறிப் பொறியாகப் புன்கம் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. நம் முலைகளில் புன்கம் பூக்களை அணிந்துகொள்ளும் பொழுது இது. புன்கம் பூக்கள் குளுமை தரும். அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
அவரோ வாரார் தான்வந் தன்றே வலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம் மண்ங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே. | 348 |
மராம் பூக்கள் வலப்புறமாகச் சுழன்று பூத்து மணக்கின்றன. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
அவரோ வாரார் தான்வந் தன்றே பொரிகால் மாஞ்சினை புதைய எரிகால் இளந்தளிர் ஈனும் பொழுதே. | 349 |
பொறிந்த கொம்புகளை உடையது மாங்கிளை. அதில் தீ எரிவது போல மாவிலைகள் தளிர் விட்டிருக்கின்றன. அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
அவரோ வாரார் தான்வந் தன்றே வேம்பின் ஒண்பூ உறப்பத் தேம்படு கிளவியவர்த் தெளீக்கும் போதே. | 350 |
வேப்பம் பூ பூத்ததுக் கிடக்கிறது. அவர் வருவேன் என்று சொன்ன காலம் இதுதான். அவர் வரவில்லை. இளவேனில் வந்துவிட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 33 | 34 | 35 | 36 | 37 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தன்றே, தான்வந், வாரார், அவரோ, பொழுதே, மராஅம், வேய்ந்துநம், வலஞ்சுரி, தண்பொழில், மலரும், பொரிப்பூம், எழில்தகை, பொலியப், புன்கின், முறிதிமிர்