யாப்பெருங்கலக் காரிகை
கலிப்பாவும் அதன் இனமும்
நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
தரவொன்று தாழிசை மூன்று தனிச்சொற் சுரிதகமாய்
நிரலொன்றி னேரிசை யத்தா ழிசைக்கலி நீர்த்திரைபோல் மரபொன்று நேரடி முச்சீர் குறணடு வேமடுப்பின் அரவொன்று மல்கு லதம்போ தரங்கவொத் தாழிசையே | 31 |
வண்னக ஒத்தாழிசைக் கலிப்பா, வெண்கலிப்பா
அசையடி முன்னர் அராகம்வந் தெல்லா உறுப்புமுண்டேல்
வசையறு வண்ணக வொத்தா ழிசைக்கலி வான்றளைதட் டிசைதன தாகியும் வெண்பா இயந்துமின் பான்மொழியாய் விசையறு சிந்தடி யாலிறு மாய்விடின் வெண்கலியே | 32 |
கொச்சகக் கலிப்பாவின் வகை
தரவே தரவிணை தாழிசை தாமுஞ் சிலபலவாய்
மரபே யியன்று மயங்கியும் வந்தன வாங்கமைந்தோள் அரவே ரகலல்கு லம்பேர் நெடுங்கண்வம் பேறுகொங்கைக் குரவே கமழ்குழ லாய்கொண்ட வான்பெயர் கொச்சகமே | 33 |
கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம்
அடிவரை யின்றி யளவொத்து மந்தடி நீண்டிசைப்பிற்
கடிதலில் லாக்கலித் தாழிசை யாகுங் கலித்துறையே நெடிலடி நான்காய் நிகழ்வது நேரடி யிரண்டாய் விடினது வாகும் விருத்தந் திருத்தகு மெல்லியலே | 34 |
வஞ்சிபாவினமும், வஞ்சிப்பாவிற் கீறாமாறும்
வஞ்சித் தாழிசை, துறை, விருத்தம் அதன் ஈறு
குறளடி நான்கின மூன்றொரு தாழிசை கோதில்வஞ்சித்
துறையரு வாது தனிவரு மாய்விடிற் சிந்தடிநான் கறைதரு காலை யமுதே விருத்தந் தனிச்சொல்வந்து மறைதலில் வாரத்தி னாலிறும் வஞ்சிவஞ் சிக்கொடியே | 35 |
மருட்பா
பண்பார் புறநிலை பாங்குடை கைக்கிளை வாயுறைவாழ்த்
தொண்பாச் செவியறி வென்றிப் பொருண்மிசை யூனமில்லா வெண்பா முதல்வந் தகவல்பின் னாக விளையுமென்றால் வண்பால் மொழிமட வாய்மருட் பாவெனும் வையகமே | 36 |
செய்யுளியற் செய்யுட்களின் முதல்நினைப்புக் காரிகை
வெண்பா வளம்பட வீரடி யன்றுட னேரிசையும்
கண்பானல் போன்மயி லந்தமின் மூன்றுங் கடைதருக்கி நண்பார் தரவொன் றசைதர வேயடி யோடுகுறள் பண்பார் புறநிலை செய்யு ளியலென்ப பாவலரே | 37 |
ஒழிபியல்
எழுத்துக்கள், அலகு பெறாதன, பெறுவன
சீருந் தளையுஞ் சிதையிற் சிறிய இஉஅளபோ
டாகு மறிவ ரலகு பெறாமை ஐ காரநைவேல் ஓருங் குறிலிய லொற்றள பாய்விடி னோரலகாம் வாரும் வடமுந் திகழு முகிழ்முலை வாணுதலே | 38 |
விட்டிசைத் தல்லான் முதற்கண் தனிக்குறில் நேரசையென்
றாட்டப் படாததற் குண்ணா னுதாரணம் ஓசைகுன்றா நெட்டள பாய்விரி னேர்நேர் நிரையடு நேரசையாம் இட்டதி னாற்குறில் சேரி னிலக்கிய மேர்சிதைவே | 39 |
மாஞ்சீர் கலியுட் புகாகலிப் பாவின் விளங்கனிவந்
தாஞ்சீ ரடையா வகவ லகத்துமல் லாதவெல்லாந் தாஞ்சீர் மயங்குந் தளையு மதேவெள்ளைத் தன்மைகுன்றிப் போஞ்சீர் கனிபுகிற் புல்லா தயற்றளை பூங்கொடியே | 40 |
இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாத மகவலுள்ளான்
மயக்கப்படா வல்ல வஞ்சி மருங்கினெஞ் சாவகவல் கயற்கணல் லாய்கலிப் பாதமு நண்ணுங் கலியினுள்ளான் முயக்கப் படுமுதற் காலிரு பாவு முறைமையினே | 41 |
அருகிக் கலியோ டகவல் மருங்கினைஞ் சீரடியும்
வருதற் குரித்தென்பர் வான்றமிழ் நாவலர் மற்றொருசார் கருதிற் கடையே கடையிணை பின்கடைக் கூழையுமென் றிரணத் தொடைக்கு மொழிவர் இடைப்புணர் வென்பதுவே | 42 |
வருக்க நெடிலினம் வந்தா லெதுகையு மோனையுமென்
றொருக்கப் பெயரா னுரைக்கப் படுமுயி ராசிடையிட் டிருக்கு மொருசா ரிரண்டடி மூன்றா மெழுத்துமொன்றி நிரக்கு மெதுகையென் றாலுஞ் சிறப்பில நேரிழையே | 43 |
சுருங்கிற்று மூன்றடி யேனைத் தரவிரு மூன்றடியே
தரங்கக்கும் வண்ணகத் குந்தர வாவது தாழிசைப்பா சுருங்கிற் றிரண்டடி யோக்க மிரட்டி சுரும்பிமிருந் தரங்கக் குழலாய் சுருங்குந் தரவினிற் றாழிசையே | 44 |
பொருளோ டடிமுத னிற்பது கூனது வேபொருந்தி
இருள்சேர் விலாவஞ்சி யீற்றினு நிற்கு மினியழிந்த மருடீர் விகாரம் வகையுளி வாழ்த்து வசைவனப்புப் பொருள்கோள் குறிப்பிசை யப்புங் குறிக்கொள் பொலங்கொடியே | 45 |
எழுத்துப் பதின்மூன் றிரண்டசை சீர்முப்ப தேழ்தளையைந
திழுக்கி லடிதொடை நாற்பதின் மூன்றைந்து பாவினமுன் றொழுக்கிய வண்ணங்க ணூறென்ப தொண்பொருள் கோளிருமூ வழுக்கில் விகாரம் வனப்பெட் டியாப்புள் வகுத்தனவே | 46 |
ஒழிபியல் செய்யுட்களின் முதனினைப்புக் காரிகை
சீரொடு விட்டிசை மாஞ்சீர் ரியற்றளை சேர்ந்தருகி
வாரடர் கொங்கை வருக்கஞ் சுருங்கிற்று வான்பொருளுஞ் சீரிய தூங்கேந் தடுக்குச் சிறந்த வெழுத்துமன்றே ஆரும் ஒழிபியற் பாட்டின் முதல்நினைப் பாகுமன்றே | 47 |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யாப்பெருங்கலக் காரிகை, Yapperungalak Karikai, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்