சிதம்பரப்பாட்டியல்
ஒழிபியல்.
11 |
ஆந்தளைசீர் கெடிலிகர வுகரத்தேய் வொற்று மாமலகு பெறாவளவை யௌக்குறுமைக் குறிலா மேய்ந்தவுயி ரோரளபு மீரளபு மாகி யீரசையா மூவசையா மொற்றளபு குறினேர் சேர்ந்தசையா மொற்றிலையே லொற்றாமொற் றளவாஞ் செறிவிலீ ரொற்றுமூ வொற்றுமொரொற் றாமுன் சார்ந்தகுறில் விட்டிசைக்கி னேராம்வெண் பாவெண் டளையலது தயங்காது மயங்கிடுமெப் பாவும். |
என்பது சூத்திரம்.
"ஆந்தளைசீர்கெடிலிகரவுகரத்தேய்வொற்றுமாம்." என்பது, தளையுஞ்சீருங் கெடவந்தவிடத்துக் குற்றயலிகரமுங்
குற்றியலுகரமும் ஒற்றாம்; உம்மையால் ஒற்றல்லாமலுமாம்;
"தளைசீர்கெடி"லென்பதனை முதனிலைத்தீபமாக்கிக்கொள்க; மேல்வருவனவற்றிற்கும் ஒக்கும்.
"அலகுபெறாவளவு"
எ-து, உயிரளபெடை ஒரோவிடங்களிலே நீக்கப்படும்.
"ஐ ஒளக்குறுமைகுறிலாம்"
எ-து, ஐகாரக்குறுக்கமும், ஒளகாரக் குறுக்கமும் குற்றெழுத்தாம்;
"ஏய்ந்தவுயிரோரளபு மீரளபுமாகி யீரசையாமூ வசையாம்"
எ-து, உயிரளபெடையானது, ஓரளபெழுந்தால் ஈரசையாம்; ஈரளபெழுந்தால் மூவசையாம்;
"செய்யுட்க ளோசை சிதையுங்கா லீரளபும், ஐயப்பா டின்றி யணையுமாம்-மைதீரொற், றின்றியுஞ் செய்யுட்கெடினொற்றை
யுண்டாக்குங், குன்றுமே லொற்றளபுங் கொள்" என்றார் பூதபுராணமுடையாரும்.
"ஒற்றளபுகுறினேர்,சேர்ந்தசையாம்" எ-து, ஒற்றளபெழுந்தாற் குற்றெழுத்தாம்; அன்றி முன்னின்றவெழுத்துடனேகூடி
நிரையசையாய் நில்லாது குற்றெழுத்தின் மாத்திரையைப்பெற்று, நேரசையாகவேநிற்கும்;
"ஒற்றிலையேலொற்றா மொற்றளபாம்"
எ-து, ஒற்றில்லாதவிடத்து ஒற்று உண்டாக்கலாம்; அந்தவொற்றிலு மமைதிபிறவாதபோது தோற்றினவொற்றையே
யளபாக்கலாம்; 'மைதீரொற்றின்றியும் செய்யுட்கெடினொற்றையுண்டாக்குங்-குன்றுமேலொற்றளபுங்கொள்' என்பதனுட்
கண்டுகொள்க.
'செறிவிலீரொற்று மூவொற்றுமோரொற்றாம்'
எ-து, அந்நியமாய் ஈரொற்றுவந்தாலும்,மூவொற்றுவந்தாலு மோரொற்றாகவே நிற்கும்;
"ஈரொற்றாயினு மூவொற்றாயினு,மோரொற்றியல வென்மனார் புலவர்"என்னு மிதனுட்காண்க.
"முன்சார்ந்த குறில்விட்டிசைக்கில்நேராம்", எ-து, ஆதியிலேவிட்டிசைத்துக் குற்றெழுத்து வந்தால் நேரசையாம்;
"வெண்பாவெண்டளையலது தயங்காது மயங்கிடுமெப்பாவும்"
எ-து, வெண்பாவுக்கு வெண்டளையொழிந்து வெற்றுத்தளைவராது; மற்ற பாக்களுக்கும் எல்லாத் தளையுமயங்கியும்
வழங்கும்; இவையாப்பருங்கலத்துள் காண்க.
"வாய்ந்த வுயிர்ப்பின் வருமெழுத்தின் வர்க்கத்தொற்
றேய்ந்து புகுது மியல்புமா--மேய்ந்த
விறுதி வருமெழுத்தா மீராறா மோரோர்
மறுவில் பதங்கெட்டு வரும்."
இவ்வெண்பாவினுள்ளுங் குற்றுகரந்தள்ளச் சீர்சிதையாது. "தடமண்டு" என்பதனுட் குற்றுகரமொற்றலாதவாறு
கண்டுகொள்க.
"பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை பைங்கிளிகள்
சொல்லுக்குத் தோற்றின்னந் தோற்றிலவா--னெல்லுக்கு
நூறோஓஓநூ றென்பா ணுடங்கிடைக்கு மென்முலைக்கு
மாறோமா லன்றளந்த மண்" எனவும்.
" இடைநுடங்க வீர்ங்கோதை பின்றாழ வாட்கண்
புடைபெயரப் போழ்வாய் திறந்து--கடைகடையி
னுப்போஓஓ வெனவுரைத்து மீள்வா ளொளிமுறுவற்
கொப்போநீர் வேலியுலகு".
என்பவற்றில், நூறோ நூறெனவும், உப்போவெனவும், பண்டமாற்றின் கண்வந்த அளபெடையை நீக்கி,
நெட்டெழுத்தாகவேகொள்ளச் சீர்சிதையாது.
"அன்னையையா னோவ தவமா லணியிழாய்
புன்னையையா னோவன் புலந்து. " எனவும்,
" பிறிந்த விருந்த பெருமா னுரையை
யறிந்தேன் மௌனமொழி யால்" எனவும்,
ஐகாரக்குறுக்கமும் ஔகாரக்குறுக்கமுங் குற்றெழுத்தானவாறுங் காண்க.
" ஏஎர் சிதைய வழாஅஅ லெலாநின்
சேயரி சிந்திய கண்" எனவும்,
" உறா அஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்
செறா அஅய் வாழிய நெஞ்சு" எனவும்,
ஓரளபெடையு மீரளபெடையும் வந்தவாறு காண்க.
"கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிறு
பொன்ன் பொறிசுணங்கு போழ்வா யிலவம்பூ
மின்ன் னுழைமருங்குன் மேதகு சாயலா
லென்ன் பிறர்மகளா மாறு." எனவும்,
"அம்ம் பவள்ள் வரிநெடுங் கண்ணாய்வஞ்சிக்
கொம்ம் பவள்ள் கொடிமருங்குல் கோங்கி
னரும்ம் பவண்முலை யொக்குமே யொக்குங்
கரும்ம் பவள்வாயிற் சொல்."
"எஃஃ கிலங்கிய கையரா யின்னுயிர்
வெஃஃகு வார்க்கில்லை வீடு." எனவும்,
ஒற்றளபெடை ஒருமாத்திரைபெற்று நேரசையாயினவாறு காண்க.
"அம்பொரைந்துடையகாமனையனென்னவந்தன
னம்புநீரரல்லர்நன்குரங்குநீரராயினுந்
தங்குரவ்வர் தாங்கொடுப்பினெஞ்சு நேர்ந்து தாழ்வர் தாம்
பொங்கரவவல்குலாரெனப்புகன்றுசொல்லினார்"
என்பதனுள், "குரவ்வரென" ஒற்றில்லாதவிடத் தொற்றுண்டானது கண்டு கொள்க.
"பீலிமஞ்ஞை நோக்கி" என்பதனுள் ஒற்றில்லாதுதோற்றின ஒற்றே அளபானது கண்டு கொள்க.
"கார்க்கடல்,"பேய்க்குணவு" என்பனவற்றுள் அந்நியமான ஈரொற்று
மோரொற்றாயினவாறு காண்க.
"உண்ணானொளிநிறான்" எனவும் "அஅவனும் இஇவணும் உஉவனுங்
கூடியக்கால், எஎவனை வெல்வா ரிகல்" எனவும்,
"ஏவல் குறிப்பே தற்சுட் டல்வழி, யாவையுந் தனிக்குறின் முதலசை
யாகா" என்பதனால்,முதற்கட்டனிக்குறில் நேரசையாயினவாறு காண்க.
"குலாவணங்கு வில்லெயினர் கோன்கண்டான் கோழி
நிலாவணங்கு நேர்மணன்மே னின்று--புலாலுணங்கல்
கொள்ளும்புட் காக்கின்ற கோவின்மையோ நீபிற
ருள்ளம் புகாப்ப துரை."
என்பதனுள், வெண்பா சீர்தளை சிதைந்தவாறு காண்க.
'குடநிலைத்தண்புறவில்' என்னுங்கலிப்பாவினுள்ளுமற்றுங்கொச்சகக் கலிப்பாவினுள்ளு மாசிரியவுரிச்சீரும், வெண்சீரும்,
வஞ்சியுரிச்சீரும்வந்து, வெண்டளையு மாசிரியத்தளையுங் கலித்தளையும் வஞ்சித்தளையு மயங்கி வந்தமை கண்டுகொள்க.
"நெடுவரைச் சாரற் குறுங்கோட்டுப் பலவின்
விண்டுவார் தீஞ்சுளை வீங்குகவுட் கடுவ
னுண்டுசிலம் பேறி யோங்கிய விருங்கழை
படிந்தமாக் களிறு பயிற்றுமென்ப
மடியாக் கொலைவில் லென்னையர்மலையே.
இவ்வாசிரியத்துட் டன்சீரும் வெண்சீரும் வஞ்சிச்சீரும் விரவி வந்தவாறு கண்டுகொள்க.
"மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரும்வளியும்
வளித்தலைஇய தீயுந்
தீமுரணிய நீரும்." எனவும்,
" தொன்னலத்தின்" எனவும் வஞ்சிப் பாக்களுள்ளும் பிறவற்றுள்ளும் கலித்தளையு மாசிரியத் தளையும்மயங்கி வந்தவாறு கண்டுகொள்க. (11)
12 |
மயங்கும்படி யெப்பாவும் வெண்பாவுக் கன்றி மன்னினமுந் தளையுமயங் கிவரும் அஆ ஐஔ நயங்கொள்ளும் இஈஎ ஏஉஊ ஒஓ ஞணனநம வசதவெனு மோனைமெய்யு மோனை யியங்குமின நெடில்வருக்கம் வரிலெதுகை மோனை யரலவழவொற் றாசிடையிட் டுயிருமிரண்டடியுந் தயங்கிய மூன்றாமெழுத்து மெதுகைகடை யிணைபின் சார்கூழை யிடைப்புணரு முரண்டொடைக்குஞ் சாற்றே. |
எ-து. சூத்திரம்.
" மயங்குமடி யெப்பாவும் வெண்பாவுக் கன்றி"
எ-து எல்லாப் பாக்களுக்கும் ஒருபாவிலடி ஒருபாவிற்புக மயங்கும்; வெண்பாவில், வேற்றுப்பாவினடி வாராது; "மன்னினமுந்
தளையுமயங் கிவரும்"
எ-து, தாழிசை, துறை, விருத்தம் என்று சொல்லப்பட்ட நாலு பாவினங்கட்கும் இன்னதளையென்னு நியமமில்லாமல்
மயங்கிவரப்பெறும்; தளையுமென்ற உம்மையால் அடியுமயங்கப்பெறும்;
"அஆஐஔ, நயங்கொள்ளும் இஈஎ ஏஉஊ ஒஓ, வசதவெனு மோனை"
எ-து, அஆஐஔ எனவும், இஈ எஏ எனவும், உஊ ஒஓ எனவும், ஞணனந மவ எனவும் சத எனவும் வரும்; இவை தம்முள்
ஒன்றுக்கொன்று அனுவாக வந்தமையாலனுமோனையாம்;
"மெய்யுமோனை"
எ-து, ஆதியிலே உயிர் நின்றாலும் மெய் நின்றாலும் நின்றவடியேமோனையாய் வரில் மெய்ம்மோனையாம்.
"இயங்குமின நெடில்வருக்கம் வரிலெதுகை மோனை"
எ-து, இனவெழுத்தேவந்தா லினவெதுகையென்றும் இனமோனையென்றும், நெடிலெழுத்தே வந்தால்
நெடிலெதுகையென்றும் நெடின்மோனையென்றும், வருக்கவெழுத்தே வந்தால் வருக்கவெதுகையென்றும்
வருக்கமோனையென்றும் பெயர். இனமென்றது, வல்லின மெல்லின மிடையினம்.
"யரலழ வொற்றாசிடை யிட்டுயிரு மிரண்டடியியுந், தயங்கிய மூன்றாமெழுத்துமெதுகை"
எ-து, "யரலழ வென்னு மீரிரண் டொற்று, வரன்முறை பிறழாது வந்திடை யுரப்பி, னாசிடை யெதுகையென் றறியல்
வேண்டும்" எனக் கண்டு கொள்க.
இடையிட்டெதுகை வந்தால், இடையெட்டெதுகையாம். எதுகையிலே யுயிர்வந்தாலுயிரெதுகையாம். இவ்விரண்டடி
யொவ்வோர் எதுகை வந்தாலிரண்டடி யெதுகையாம். மூன்றாமெழுத்தடிதோறும் வந்தால், மூன்றாமெழுத்
தொன்றெதுகையாம்.
"கடையிணை பின்சார் கூழையிடைப்புணரு முரண்டொடைக்குஞ் சாற்றே"
எ-து, கடைமுரணுங் கடையிணை முரணும் பின்முரணுங் கடைக்கூழை முரணும் இடைப்புணர்முரணும் எனவரும்.
அவையாவன:-- நாலாஞ்சீர் முரணுதல் கடைமுரண். நாலாஞ்சீரு மூன்றாஞ்சீரு முரணுதல் கடையிணைமுரண். நாலாஞ்சீரு
மிரண்டாஞ்சீரு முரணுதல் பின்முரண். முதற்சீரொழித்த மூன்றுசீருமுரணுதல் கடைக்கூழைமுரண். இரண்டாஞ்சீரு
மூன்றாஞ்சீரு முரணுத லிடைப்புணர்முரண் எனவரும்.
இனியுதாரணம்:--
"அங்கண் மதிய மரவின்வாய்ப் பட்டெனப்
பூசல் வாயாப் புலம்புமனைக் கலங்கி
யேதின் மாக்களு நோவர் தோழி
யொன்று நோவா ரில்லைத்
தெண்கடற் சேர்ப்ப னுண்டவென் னலக்கே."
இவ்வாசிரியத்துள், "அங்கண் மதிய மரவின்வாய்ப் பட்டெனப், பொங்கிய பூசல் பெரிது" என வெள்ளடியானவாறும்;--
"இருங்கட லுடுத்தவிப் பெருங்கண் மாநில
முடையிலை நடுவணத் திடைபிறர்க் கின்றித்
தாமே யாண்ட வேமங் காவல
ரிடுதிரை மணலினும் பலரே சுடுபிணக்
காடுபதி யாகப் போகித் தத்த
நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே
அதனால், நீயுங் கேண்மதி யத்தை வீயா
துடம்பொடு நின்ற வுயிரு மில்லை
மடங்க லுண்மை மாயமோ வன்றே
கள்ளி வேய்ந்த முள்ளியம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலு ளாங்க
ணுப்பிலாஅ வவிப்புழுக்கல்
கைக்கொண்டு பிறக்குநோக்கா
திழிபிறப்பினோ னீயப்பெற்று
நிலங்கல னாக விலங்குபலி மிசையு
மின்னா வைகல் வாரா முன்னே
செய்ந்நீ முன்னிய வினையே
முந்நீர் வரைப்பக முழுதுடன் றுறத்தே.
இவ்வாசிரியத்துள் "உப்பிலா அ வவிப்புழுக்கல்" எனவும் "கைக்கொண்டு பிறக்குநோக்காது" எனவும், "இழிபிறப்பினோ னீயப்பெற்று" எனவும், வஞ்சியடி விரவிவந்தவாறு கண்டுகொள்க.
"குருகுவெண் டாளி கோடுபுய்த் துண்டென
மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது
மருள்பிடி திரிதருஞ் சார
லருளா னாகுத லாயிழை கொடிதே."
இவ்வாசிரியத்துள், "மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது, தீ வழங்கு சுழல்விழிக்கட் சீயஞ்சென் றுழலுமே" என
உச்சரித்துக் கலியடியாமாறு கண்டுகொள்க.
"நேரிழை மகளி ருணங்குணாக் கவருங்
கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை."
என்னுமிவ்வஞ்சிப்பா ஆசிரிய அடியாயினவாறும்,
"வயலாமைப் புழுக்குண்டு வறளடும்பின் மலர்மிலைந்து
கயனாட்டக் கடைசியர்தங் காதலர்தோள் சேர்ந்தனரே."
எனக் கலியடியாமாறும் கண்டுகொள்க. வஞ்சிப்பாவினுள் வெள்ளடி வருமாறும், கலிப்பாவினுள் மற்ற மூன்று பாவடியும்
வருமாறும் "யாப்பருங்கலவிருத்தி" யுட் கண்டுகொள்க. தாழிசை, துறை, விருத்தம் என்று சொல்லப்பட்ட
நாலுபாவினங்களுந் தளைமயங்கி வருதற்கு உதாரணம் முன்னர்க் காட்டியவற்றுள்ளும், பிறவற்றுள்ளுங்
கண்டுகொள்க.அனுமோனைக்கும், மெய்ம்மோனைக்கு முன்னர்க் காட்டியவற்றுள்ளும் பிறவற்றுள்ளுங் கண்டுகொள்க.
இனவெதுகை மூன்றாவன;----
"தக்கார் தகவில ரென்ப தவரவ
ரெச்சத்தாற் காணப் படும் ."
இது வல்லினவெதுகை.
"அன்பீனு மார்வ முடைமை யதுவீனு
நண்பென்னு நாடாச் சிறப்பு."
இது மெல்லினவெதுகை.
"எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு"
இஃது இடையினவெதுகை.
"ஆஆ என்றே.....ஒருசரார்" இது நெடிலெதுகை.
"நீடிணர்க் கொம்பர்க் குயிலாலத் தாதூதிப்
பாடிவண் டஞ்சி யகலும் பருவத்துத்
தோடார் தொடிநெகிழ்த்தா ருள்ளார் படலொல்லாப்
பாடமை சேக்கையுட் கண்"
இது வருக்கவெதுகை.
இனி மோனைவருமாறு;இவற்றுள்,இனமோனை மூன்றாவன:-
"கயலே ருண்கண் கலுழ நாளுஞ்
சுடர்புரை திருநுதல் பசலை பாயத்
திருந்திழை யமைத்தோ ளரும்பட ருழப்பப்
போகல் வாழிய ரைய பூத்த
கொழுங்கொடி யணிமலர் தயங்கப்
பெருந்தண் வாடை வரூஉம் பொழுதே."
இது வல்லினமோனை.
மெல்லினமோனையு மிடையின மோனையும் வந்தவழிக் கண்டுகொள்க.
"ஆர்கலி யுலகத்து" என்பது நெடின்மோனை.
"பகலே, பல்பூங் கானற் கிள்ளை யோப்பியும்
பாசிலைக் குளவியொடு கூதளம் விரைஇப்
பின்னுப்பிணி யவிழ்ந்த நன்னெடுங் கூந்தல்
பீர்ங்கப் பெய்து தேம்படத் திருகிப்
புனையீ ரோதி செய்குறி நசைஇப்
பூந்தார் மார்ப புனத்துட் டேன்றாப்
பெருவரை யடுக்கத் தொருவே லேந்திப்
பேயு மறியா மாவழங்கு பெருங்காட்டுப்
பைங்க ணுழுவைப் படுபகை வெரீஇப்
பொருதுசினந் தணியாப் பூணுத லொருத்தல்
போகாது வழங்கு மாரிரு ணடுநாட்
"தோடா ரெல்வளை நெகிழ நாளு
நெய்த லுண்கண் பைதல் கலுழ
வாடா வவ்வரி புதைஇப் பசலையும்
வைக றோறும் பைப்பயப் பெருக
நீடா ரிவரென நீண்மணங் கொண்டார்
கேளார் கொல்லோ காதலர் தோழி
வாடாப் பௌவ வறன்முகந் தெழிலி
பருவம் பெய்யாது வலனேர்பு வளைஇ
வோடா மலையன்* வேலிற்
கடிது மின்னுமிக் கார்மழைக் குரலே"
இஃது, இடையிட்டு வந்தமையால் இடையீட்டெதுகை.
"துளியொடு மயங்கிய தூங்கிரு ணடுநா
ளணிகிளர் தாரோ யருஞ்சுர நீந்தி
வடியமை யெஃகம் வலவயி னேந்தி
தனியே வருதி நீயெனின்
மையிருங் கூந்த லுய்தலோ வரிதே."
இஃதிரண்டா மெழுத்தின் மேலேறின உயிரொன்றி வந்தமையால் உயிரெதுகை.
"துவைக்குந் துளிமுந்நீர்க் கொற்கை மகளி
ரவைப்பதம் பல்லிற் கழகொவ்வா முத்த
மணங்கமழ்தா ரச்சுதன் மண்காக்கும் வேலி
னணங்கு மமுதமு மந்நலார் பாடல்."
இது, முன்னிரன்டடியுமோரெதுகையாய்ப் பின்னிரண்டடியும் வேறோரெதுகையாய் வந்தமையால் இரண்டடியெதுகை.
"பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்."
இது, மூன்றா மெழுத்தெதுகை.
"கயன் மலைந்*தன்ன கண்ணிணை கரிதே
தடமுலைத் திவளுத் தனிவடம் வெளிதே
நூலி னுண்ணிடை சிறிதே
யாடமைத் தோளிக் கல்குலோ பெரிதே."
இஃதடிதோறுங்கடைச்சீர்மறுதலைப்படத்தொடுத்தமையாற்கடைமுரண்.
"மீன்றேர்ந் தருந்திய கருங்கால் வெண்குருகு
தேனார் ஞாழல் விரிசினைக் குழூஉந்
தண்ணந் துறைவன் றவிர்ப்பவுந் தவிரான்
றேரோ காண்கலங் காண்டும்
பீரேர் வண்ணமெஞ் சிறுநுதற் பெரிதே."
இஃதடிதோறுங் கடைச் சீரிரண்டும் மறுதலைப் படத்தொடுத்தமையாற் கடையிணைமுரண்.
"சார லோங்கிய தடந்தாட் டாழை
கொய்ம்மலர் குவிந்து தண்ணிழல் விரிந்து
தமிய மிருந்தன மாக நின்றுதன்
னலனுடைப் பனிமொழி நன்குபல பயிற்றி
வீங்குதொடிப் பணைத்தோள் நெகிழத்
துறந்தோ னல்லனெம் மேனியோ தீதே."
இஃதடிதோறும் முதற்சீர்க்குப்பின்னும் மூன்றாஞ்சீர்க்குப் பின்னும் மறுதலைப்படத் தொடுத்தமையாற் பின்முரண்.
"காவியங் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடிப்
பூவிரி சுரிமென் கூந்தலும்
வேய்புரை தோளு மணங்குமா லெமக்கே."
இது, முதற்சீரெழுத்தும் மூன்றுசீரும் மறுதலைப்படத்தொடுத்தமையாற் கடைக்கூழைமுரண்.
"போதுவிரி குறிஞ்சி நெடுந்தண் மால்வரைக்
கோதையிற் றாழ்ந்த வோங்குவெள் ளருவி
காந்தளஞ் செங்குலைப் பைங்கூ தாளி
வேரல் விரிமலர் முகையொடு விரைஇப்
பெருமலைச் சீறூ ரிழிதரு நலங்கவர்ந்
தின்னா வாயின வினியோர் நாட்டே."
இஃதிடையிருசீரும் மறுதலைப்படத்தொடுத்தமையால், இடைப்புணர் முரண்.முரண்டொடைக்குமென்றவும்மையால்
ஒழிந்ததொடைக்குமவ்வாறே கொள்க. (12)
13 |
சாற்றெல்லை கட்குநெடி லடியாதி மோனை சாரெழுவா யெழுத்துமலா தநுமோனை விதியாற் றேற்றெதுகை மோனையுடன் வரிற்சிறப்பெத் தொடையுஞ் சீரிடையீ ரநுவும்வருந் தொடைகள்பல தளைகள் தோற்றின்முதல் வந்ததொடை யாற்றளையாற் பெயராஞ் *சுருங்குதா ழிசைதரவிற் றரவடிமூன் றிழிபே யேற்றபா விரண்டேவெண் பாவகவல் வெண்பா விடத்தில் வருங் கலியகவ லிடத்தில்வரும் வஞ்சி.ç |
14 |
இதுகுறளின் சிதைவுஞ்செந் துறையிழிபுங் குறட்டா ழிசையாம்வேற் றொலிவரினும் வெண்டுறையொற் றெண்ணா தறையடிநேர் பதினாறு நிரைபதினே ழெழுத்தா யடிநான்கு தொறும்வரிற்கட் டளைக்கலித்து றையே யுறுபொருள்சூத் திரங்குறித்த யாப்பிற்றாய் நாற்சீ ரோரடியும் பலவடியும் வருநூற்பா வகவல் புறநிலைவா யுறைவாழ்த்துச் செவியறி்கைக் கிளைகள் பொருளாய்முன் வெண்பாப்பின் னகவல்வரு மருட்பா. |
15 |
வருதனிச்சொற் கூன்பொருளோ டடிமுன்வரு மதுவே வஞ்சியீற் றினுமாம்வெண் பாவகவ லீற்றாற் சுரிதகமாம் வேறுமடி பாவிசையாற் றளையாற் சூழெழுத்தெண் ணால்வகுத்த வகுப்பாற்கா ரணத்தாற் பெருகியிடுங் காலவழக் காற் பலவாஞ் செய்யுட் பெயரெழுத்து முதலெட்டு வகைவிரிவுங் குவிவும் பரவுவகை யுளிவணப்பு வண்ணவகை மற்றும் பலவுமடங் காதடக்கிப் பகருவர்சான் றோரே. |
16 |
பகர்செய்யுள் மங்கலச்சொல் லெழுத்துத் தானம் பாலுண்டி வருணநாட் கதியே யென்றாப் புகரில்கண மெனப்பத்தும் பிறங்கு கேள்விப் புலவர்புகழ் முன்மொழிக்குப் புகல்வர் செம்பொற் சிகரகிரி யெனப்பணைத்துப் புடைத்து விம்மித் திரண்டெழுந்து வளர்ந்திளகிச் செறிந்த கொங்கைத் தகரமலர்க் குழற்கருங்கட் குமுதச் செவ்வாய்ச் சரிவளைக்கைக் கொடியென்னத் தயங்கு மாதே. |
17 |
மாமணிதேர் புகழமுத மெழுத்துக் கங்கை மதிபருதி களிறுபரி யுலகஞ் சீர்நாள் பூமலைகார் திருக்கடனீர் பழனம் பார்சொற் பொன்றிகிரி பிறவுமுதன் மொழிச்சீர்க் காகும் நாமவகை யுளிசேர்தல் பொருள தின்மை நலமிலதாய் வைத்தல்பல பொருளாற் றோன்ற லாமினிய சொல்லீறு திரிதல் போலு மாதிமொழிக் காகாவா னந்த மாமே |
18 |
ஆனவெழுத் தொன்பதே ழைந்து மூன்றாம் ஆகாதெட் டாறுநான் காதிச் சீர்க்கே யூனமிலா அஆவும் இஈ ஐயும் உஊவும் எஏயும் ஒஓ ஒளவுந் தானமிதை வகையாமந் தாதி தன்னிற் றலைவன்பேர் முதலெழுத்திற் பால னாதி மேனிரையெண் ணிற்பால குமர ராசர் வேண்டிடும்வேண் டாவிருத்த மரணந் தானே. |
19 |
மருவுகுறி லாணெடில்பெண் ணவரி வர்க்கா மயங்கினுமாம் வரலாகாபேடொற் றாய்த முரியகச தநபமவ வேழோ டாதி யுயிர்க்குறினான் கிவையமுத மாதிச் சீர்க்கும் அரிய தசாங் கத்தயற்கு நலம தாகு மமுதமொழிக் கல்லாத வெழுத்துங் கான்மாத் திரையளவஃ கேனமுடன் மூன்று நஞ்சாய்ச் செப்புமெழுத் திவையெல்லாந் தீதாம ன்றே. |
20 |
தீதிலுயி ரீராறு முதலொற் றாறுந் திருமறையோர்க் கடைவேயோ ராறு வேந்தர்க் கேதிலவ ரனக்கள்வணி கர்க்கா மற்றை யெழுத்துளவை சூத்திரர்க்கா மியன்ற சாதி யோதிமன்றன் படைப்புயிரே யரன்மால் செவ்வே ளும்பர்கோன் பருதிமதி மறலி நீர்க்கோன் காதலள கேசன்முத லிவ்வி ரண்டாய்க் கம்முதன்மூ வாறொற்றுங் கருதிச் செய்தார். |
21 |
கருதுமுயி ரடைவேநான் கைந்து மூன்று கார்த்திகையே பூராட முத்தி ராட முரறருகவ் வரியினான் கிரண்டு மூன்று மூன்றோண மாதிரையே புனர்தம் பூச மிருமைகொள்சவ் வரியினான் கைந்து மூன்றி ரேவதியச் சுவனிபரணி ஞகர மூன்று வருமவிட்டந் தகரமிரண் டேழு மூன்று வளர்சோதி விசாகமே சதைய மன்னும். |
22 |
சதிதிகழ்நவ் வினிலாறு மூன்று மூன்றுந் தருமனுடங் கேட்டையே பூரட் டாதி திதமிகுபவ் வரியினான் கிரண்டோ டாறுத் திரமுதன்மூன் றாமவ்வி லாறு மூன்று மிதமுடன்மூன் றும்மகமா யிலியம் பூர மியாவுத்தி ரட்டாதி யூயோ மூல முதலியவும் முதனான்கு மொழிந்த நான்கு முரோகணியா மிருகசீ ரிடமாம் பேர்நாள். |
23 |
பேர்நாளுற் பவனாளா தன்மூ வொன்பான் பிறித்தொன்று மூன்றைந்தே ழாகா தெட்டாங் கூராசி யும்வயினா சிகமு மாகா குறில்வன்மை யீறொழிக்கில் வானோர்க் காகும் நேர்நெடிலின் முதல்நான்கீ றில்லா மென்மை நிலமக்கள் கதிமுதற்சீர்க் காகும் ஒஓ யேர்மருவு யரலழற விலங்கா மற்றை யெழுத்துநர கக்கதிமுன் னிவைவா ராதால். |
24 |
வானிலகு நேர்குருவே நிரையாம் வெண்சீர் வரில்நபத வகணநாட் பரணி மும்மீன் ஊனமிகு புனர்பூசம் பூசம் வாணா ளுற்றபுகழ் சூனியநோய் பலன்க ளாகுந் தேனனையாய் வஞ்சிச்சீ ரடைவே நான்குந் திகழ்சரம யகணநாட் சோதி யாரல் தானமுறு கேட்டைசத யந்தான் கேடு சாவுதிரு மகிழ்ச்சிபலன் றரத்தொ டங்கும். |
25 |
துறக்கமதி வான்பருதி காய்ச்சீர் முன்னுஞ் சூழ்காற்றுத் தீநிலநீர் கனிச்சீர்ப் பின்னு நிறுத்துகண மிவ்விரண்டா மகவற் சீரின் நேரீ று வெள்ளைச்சீர் நிரைவஞ் சிச்சீர் சிறப்புடையிவ் விரண்டுமாங் கணப்பேர் மற்றுந் திகழியற்சீ ரயன்றிருக்கோக் கருடன் முன்னாம் வெறுத்தபின்னு மாமென்ப விறைவ னாட்கு மேவுகண நாட்பொருத்தம் வேண்டு மாதே. |
26 |
ஆவதுமங் கலத்தேற்ற பரியா யச்சொ லடைகொடுத்து முதற்சீருக் கடுத்த செய்யுண் மேவுதலை யிடைகடைமங் கலச்சொல் வைத்து விதியெழுத்துப் பால்வருண மயங்கு மென்ப வாவுமொரு நற்கதியால் முன்னோர் நூலின் மங்கலத்தால் நஞ்சுசில வமுத மாகுந் தூவமுத மெனிற்கதியிற் பழுது போமேற் றொடர்கலப்பா மரபினதுதொடக்கஞ் சொல்வாம். |
பொருத்தவியன் முற்றும்
----------------
மரபியல்.
27 |
துறுகொலைநீக் கித்தெய்வக் காப்பாய் சுற்றத் தொகையளவு வகுப்பகவல் விருத்தந் தன்னால் முறைகாப்புச் செங்கீரை தால்சப் பாணி முத்தம்வா ரானையம் புலியி னோடு சிறுபறைசிற் றிற்சிறுதே ரிவைபின் மூன்றுந் தெரிவையர்க்குப் பெறாகழங்கம் மானை யூசல் பெறுமூன்று முதலிருப்பத் தொன்று ளொற்றை பெறுந்திங்க டனிற்பிள்ளைக் கவியைக் கொள்ளே. |
28 |
கொண்டபுயந் தவமதங்கம் மானை காலங் குறங்களிசம் பிரதமறம் பாண்கார் தூது வண்டுதழை கைக்கினைசித் திரங்க லூசல் மடக்குமருட் பாவகவல் விருத்தம் வெண்பா வெண்டுறைவஞ் சித்துறையா சிரியம் வஞ்சி விருத்தப்பாக் கலியினமந் தாதி யாகக் கண்டவைமுன் னாதியொரு போகு வெண்பாக் கலித்துறைநேர் கூறல்கலம் பகமா மன்றே. |
29 |
அன்புறுதே வர்க்குநூ றிழிபைந் தையர்க் கரசர்க்குத் தொண்ணூறு வணிகர்க் கைம்பா னினிபுறுமுப் பானுழவர்க்கமைச்சி னுள்ளோர்க் கெழுபதெனுங் கலம்பகத்தம் மானை யூசல் முன்பொருபோ கொழித்தது பன்மணிமா லைப்பேர் மொழிவெள்ளை நூறுகலித் துறைநூ றாதல் நன்குறிலந் தாதிகலித் துறைநா னூறாய் நடப்பதகப் பொருட்கோவை நாம மன்னோ. |
30 |
மன்னிருபான் வெள்ளைகலித் துறையி ரட்டை மணிமாலை நூறுவெள்ளை பகவல் வஞ்சி பின்னர்கலித் துறையதிணை மணிமா லைப்பேர் பேசகவல் வெள்ளைகலித் துறைமுப் பானாற் சொன்னதுமும் மணிக்கோவை வகுப்பு முப்பான் சூழொலியந் தாதிவெள்ளை யகவற் பாவாற் பன்னுமிரு பாவிருப திவையந் தாதி பயோதரங்கண் ணுரைத்திடிலப் பேர்ப்பத் தாமால். |
31 |
பத்தியல்வெண் பாவின்மலை நதிநா டூர்தார் பரிகளிறு கொடிமுரசு செங்கோல் பாடின் மெத்துதசாங் கப்பத்தாந் தசாங்கந் தன்னை வெண்பாவாற் றொண்ணூறேழ் பஃது முப்பா னித்தகைமை மொழிவதுசின் னப்பூ வாகு மெழிற்கொடைசெங் கோனாடூர் வில்வாள்வென்மா அத்திதனித் தனியகவல் விருத்தம் பத்தா லறைவிருத்த விலக்கணமா மமுதச் சொல்லாய் |
32 |
சொற்கலித்தா ழிசையகவல் விருத்த மாதல் சுற்றமுடன் றாழிசையாய்ச் சொல்வ தூசல் வற்கவுயிர் கசசநப மவவெட்டின் சூழ் மருவகவல் வரின்வருக்க மாலை வெள்ளை நற்கலியின் றுறையகவ லந்தா தித்த நடைமுப்பான் மும்மணிமா லைப்பேர் மேலோ ரொற்கமிலா சிரியவிருத் தத்தைக் கூட்டி லொருநாற்பான் நான்மணிமா லைக்கென் றோதே. |
33 |
ஓதும்வெள்ளை கலித்துறையா சிரியமன்பா வுறுவிருத்தம் வகுப்பைந்தா லுரைக்கி லம்ம கோதிலலங் காரபஞ்ச கப்பே ரெட்டுக் குலவகவல் விருத்தமுறு தெய்வங் காப்பா மீதட்ட மங்கலமிப் படியொன் பானா மெத்துநவ மணிமாலை .யெப்பாட்டேனுந் தீதிலொரு பானொருபா வொருபஃ தென்ப செப்பிவைக ணான்கையுமந் தாதி தன்னால் |
34 |
அகவல்விருத் தம்வகுப் பாதல்பத் தாதி யந்தநூ றாகும்பல். சந்த மாலை புகழவ லாற்புலவர் பாணர்***** பொருநர் முத வவருரை***** பகருமதாற் றுப்படையாங்***** பாதாதி கேசங்கே சா***** மகிழவுரைத் திடிலந்தப் பே***** வகையுரைக்கின் வெளி***** |
35 |
மாசில்குல மகளுக்கு வகுப்பு***** வருபொருளொன் பாெ***** றேசுயர்மங் கலவெள்ளை வே***** திகழ்கீர்த்தி யுரைப்பது***** பேசுகுணப் பேரடுக்கி மடவ பெரும்புகழ்ச்சி மாலையப் படியாண் பாற்கு மாசகல வுரைக்கிலது நாம மாலை வருங்காம மொருதலைக்கைக் கிளைய தாகும் |
36 |
குழமகனை யடையாளங் கலிவெண் பாவாற் கூறியவன் மறுகணையக் காதல் கூரேழ் *ற்பேதை பதினொன்று பெதும்பை பன்மூன் றியன்மங்கை பத்தொன்பான மடந்தை யையைத் தழகரி வை முப்பதஃதோர் தெரிவை நாற்பா னாம்வயது பேரிளம்பெண் முதலா யுள்ளோர் தொழவுலாப் போந்ததுலாத் தலைவன் பேர்க்குத் தொடையெதுகையொன்றிலின்ப மடலாய்ச்சொல்லே. (10) |
37 |
சொன்னமா தரைக்கண்டு கனவிற் சேர்ந்தோன் துணிவன்மடலென்றதுலா மடல்பாங் கற்கு ளின்ன லுரைத் திடுதலனு ராக மாலை யிருதிணையை விடறூதிவ் வைந்து முப்பாப் பன்னுபொரு ளிடங்காலந் தொழின்முப் பானாற் பானெழுபான் தொண்ணூறு நூறால் வெண்பா மன்னுகலித் துறையாதல் புகலப் பேரான் மாலையுமா மெண்ணாலு மருவும் பேராம். |
38 |
*கிழ்**ர்கொள் வதுவெட்சி கரந்தை மீட்டல் மாற்றார்பாற் செலல்வஞ்சி யூன்றல் காஞ்சி பகர்மதிலைக் காக்குமது நொச்சி சுற்றிப் படைவளைத்த லுழிஞைபொரல் தும்பை வென்று புகழ்படைத்தல் வாகையது மாலைப் பேராற் போற்றுவது மாலையுமாப் புதல்வர் தானை யகலமுரைப் பதுதானை மாலை தூசி யணிவகுப்பிற் றாராகைமா லையைச்சொல் லாய்ந்தே |
39 |
ஆய்ந்ததசப் பிராதுற்ப வம்பத் தான வரிபிறப்பா சிரியவிருத் தத்தால் வாழ்த்தில் ஏய்ந்திடுநா ழிகைவெண்பா மன்னர்க் கீசர்க கெய்தியநா ழிகைவெண்பா நாலெட்டாய்ச்சொல் வாய்ந்தசெருக் களவஞ்சி களத்தைக் கூறல் வரலாற்று வஞ்சிபல வரலா றோதல் பாய்ந்திடுமும் மதத்தானைத் தொழினேர் கொல்லும் படைக்களிற்றைக் கண்டரசன் பற்றிச் சேர்தல். |
40 |
படைபுக்கா யிரவேழம் மெதிரார் போரிற் படப்போர்செய் தானுக்குக் கடவுள் வாழ்த்து கடைதிறப்புப் பாலைநிலங் காளிகோட்டங் கழுதுநிலை காளிக்குப் பேய்ச்சொல் பேய்க்குத் தொடர்காளி சொலலதனாற் றலைவன் கீர்த்தி சொல்லலவன் சேறல்புறப் பொருடோன் றப்போ ரடுதல்களம் விரும்பலிவை நாற்சீ ராதி படியிரண்டி லேறாமற் பரணி பாடே. |
41 |
பாடுநெறி வணக்கம்வாழ்த் தொன்று நாலாய்ப் பகர்பொருண்முன் வரவிறைவன் வெற்பு வேலை நாடுநகர் பொருள்பருவமிரு சுடர்பெண் வேட்டல் நண்ணன்முடி பொழில்புனலா டல்கள் ளுண்டல் கூடுமகிழ் வூடறுனி புதல்வர்ப் பேறு கூறிடுமந் திரந்தூது செலல்போர் வென்றி *டுசந்தித் தொடர்ச்சிசுை************தொன்ற நிகழ்த்தலம்ப முதற்பெ******பியத் *** |
42 |
அறையுமிதிற் ச்லகுறைபா டென்*****ங்குன்றா தறம்பொருளின் பம்வீட்டிற் கு****டாகப் பெறுவதுகாப் பியமாகும் புராணமா**** பேசின்முத னூல்பொருளோ டளவு ****** செறிமிகுதி செய்வித்தோன் கருத்த னானுந் திகழுமிடு குறியானு நூற்குப் பேரா முறுகலிவஞ் சிப்பாக்கை யறத்துக் காகா வுரைப்பதினி வாழ்த்தினுக்கெப் பாவு மாமே. |
43 |
பாடுமுறை தொடர்செய்யு டெரிக்க வல்ல பாவலனாற் குணங்குலஞ்சீ ரொழுக்க மேன்மை நீடழகு சமயநூல் பிறநூல் மற்று நிகழ்த்துநூ லிலக்கணநாற் கவுயுள் ளானாய் நாடுறுப்பிற் குறைவிலனாய் நோயி லானாய் நாற்பொருளு முணரந்துகலை தெளிந்து முப்பான் கூடும்வய திகழ்ந்தெழுபான் வயதி லேறாக் குறியுடைய னாகிலவள் கவிதை கொள்ளே. |
44 |
கொள்ளுமிடம் விதானித்துத் தொடைய னாற்றிக் கொடிகதலி தோரணம்பா லிகைநீர்க் கும்பந் துள்ளுபொரி விளக்கொளிர முரசி யம்பத் தோகையர்பல் லாண்டிசைப்ப மறையோர் வாழ்த்த வெள்ளைமலர்கத் துகில்புனைந்*து தவிசின் மேவி வேறுமொரு தவிசிருத்திச் செய்யுள் கேட்டே யுள்ளமகிழ் பொன்புவிபூ ணாடை மற்று முதவியே ழடிபுலவ னுடன்போய் மீளே. |
45 |
உடம்படச்செய் யான்செய்யுட் பிறர்பாற் கூறி லுற்றதிரு வவனிடைப்போ யொதுங்கு மன்றித் திடம்பெறச்செய் யுள்வரைந்து செம்பூச் சூட்டித் தெருவுமயா னம்புற்று காளி கோட்டத் *னிலங் கவன்றன்னை நினைந்து சுட்டா லீராறு திங்கடனி லிறுதி யாவன் ளடர்ந்துசெயா துளநொந்தாற் சுற்றத் தோடுந் தொலைவனிஃ துண்மையகத் தியன்றன் சொல்லே. |
46 |
அகத்தியன்சொல் லெழுத்துமுதற் குற்றஞ் செய்யுட் கடையாமற் றொடைகொண்டா லடையுஞ் செல்வ மகத்துயர்நோ யகலு மகலாது சுற்றம் வாணாளு மதிகம்வழி மரபு நீடுந் தொகைக்குற்றம் பாட்டுறிற்செல் வம்போம் நோயாஞ் சுற்றமறு மரணமுறுஞ் சோருங் காலுஞ் சகத்தவர்க்கீ தன்றியே தேவர்க் காகிற் றப்பாதிப் பலன்கவிதை சாற்றி னார்க்கே |
மரபியல் முற்றும்.
ஆகக்கவி- 46
சிதம்பரப்பாட்டியல் உரையுடன் முற்றும்.
ஆகக்கவி- 46
சிதம்பரப்பாட்டியல் உரையுடன் முற்றும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிதம்பரப்பாட்டியல், Chidambarapattiyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்