புறநானூறு - 63. என்னாவது கொல்?
பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: சோழன் வேற்பறடக்கைப் பெருவிறற் கிள்ளி; சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்.
குறிப்பு: இருவரும் பொருது களத்தில் வீழ்ந்த போது பாடியது.
திணை: தும்பை.
துறை : தொகை நிலை.
எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி, விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே; விறற் புகழ் மாண்ட புரவி எல்லாம் மறத் தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே; தேர்தர வந்த சான்றோர் எல்லாம், |
5 |
தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே; விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம், பொறுக்குநர் இன்மையின், இருந்துவிளிந் தனவே; சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென, வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே, |
10 |
என்னா வதுகொல் தானே; கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் பாசவல் முக்கித், தண்புனல் பாயும், யாணர் அறாஅ வைப்பின் காமர் கிடக்கை அவர் அகன்றலை நாடே? |
15 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 61 | 62 | 63 | 64 | 65 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 63. என்னாவது கொல்?, இலக்கியங்கள், கொல், புறநானூறு, என்னாவது, ஆம்பல், கிடந்தன, மகளிர், கிடந்தனர், ஆவது, என்ன, தோல், மாண்டு, மாண்ட, சங்க, எட்டுத்தொகை, பொருது, களத்தில், எல்லாம், தனவே, வந்த