புறநானூறு - 62. போரும் சீரும்!
பாடியவர்: கழாத் தலையார்.
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்; சோழன் வேற்பறடக் கைப் பெருவிறற் கிள்ளி.
குறிப்பு: போர்ப்புறத்துப் பொருது இவர் வீழ்ந்த காலைப் பாடியது.
திணை: தும்பை.
துறை : தொகை நிலை.
வருதார் தாங்கி, அமர்மிகல் யாவது? பொருது ஆண்டொழிந்த மைந்தர் புண்தொட்டுக், குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி, நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர் எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப், |
5 |
பருந்து அருந்துற்ற தானையொடு செருமுனிந்து, அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர் தாம்மாய்ந் தனரே; குடைதுளங் கினவே; உரைசால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே; பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம் |
10 |
இடம்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக், களங்கொளற்கு உரியோர் இன்றித், தெறுவர, உடன்வீழ்ந் தன்றால், அமரே; பெண்டிரும் பாசடகு மிசையார், பனிநீர் மூழ்கார், மார்பகம் பொருந்தி ஆங்கமைந் தன்றே; |
15 |
வாடாப் பூவின், இமையா நாட்டத்து, நாற்ற உணவினோரும் ஆற்ற அரும்பெறல் உலகம் நிறைய விருந்துபெற் றனரால்; பொலிக, நும் புகழே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 60 | 61 | 62 | 63 | 64 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 62. போரும் சீரும்!, இலக்கியங்கள், போரும், புறநானூறு, சீரும், புகழ், மாண்டவர், போர், சங்க, எட்டுத்தொகை, பொருது