முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 374. அண்டிரன் போல்வையோ ஞாயிறு?
புறநானூறு - 374. அண்டிரன் போல்வையோ ஞாயிறு?
பாடியவர்: உறையூர் ஏணிச்சேர் முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: பூவைநிலை.
கானல் மேய்ந்து வியன்புலத் தல்கும் புல்வாய் இரலை நெற்றி யன்ன, பொலம் இலங்கு சென்னிய பாறுமயிர் அவியத் தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர், மன்றப் பலவின் மால்வரைப் பொருந்தி, என் |
5 |
தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி, இருங்கலை ஓர்ப்ப இசைஇக், காண்வரக், கருங்கோற் குறிஞ்சி அடுக்கம் பாடப், புலிப்பற் றாலிப் புன்றலைச் சிறா அர் மான்கண் மகளிர், கான்தேர் அகன்று உவா |
10 |
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை, விடர்முகை அடுக்கத்துச் சினைமுதிர் சாந்தம், புகர்முக வேழத்து முருப்பொடு, மூன்றும், இருங்கேழ் வயப்புலி வரி அதள் குவைஇ, விரிந்து இறை நல்கும் நாடன், எங்கோன், |
15 |
கழல்தொடி ஆஅய் அண்டிரன் போல, வண்மையும் உடையையோ? ஞாயிறு! கொன்விளங் குதியால் விசும்பி னானே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 372 | 373 | 374 | 375 | 376 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 374. அண்டிரன் போல்வையோ ஞாயிறு?, அண்டிரன், இலக்கியங்கள், பாடினாராம், ஞாயிறு, புலவர், மகளிர், பட்ட, அகன்று, புறநானூறு, போல்வையோ, அதள், அரசன், மூன்று, சாந்தம், கழுத்தில், அடுக்கத்துச், சங்க, நெற்றி, சிலைப்பாற், எட்டுத்தொகை, முளவுமான், குறிஞ்சி