முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 372. ஆரம் முகக்குவம் எனவே!
புறநானூறு - 372. ஆரம் முகக்குவம் எனவே!
பாடியவர்: மாங்குடி கிழார்.
பாடப்பட்டோன்: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
திணை: வாகை.
துறை: மறக்கள வேள்வி.
விசிபிணித் தடாரி விம்மென ஒற்றி, ஏத்தி வந்த தெல்லாம் முழுத்த இலங்குவாள் அவிரொளி வலம்பட மின்னிக் கணைத்துளி பொழிந்த கண்கூடு பாசறைப், பொருந்தாத் தெவ்வர் அரிந்ததலை அடுப்பின், |
5 |
கூவிள விறகின் ஆக்குவரி நுடங்கல், ஆனா மண்டை வன்னியந் துடுப்பின், ஈனா வேண்மாள் இடந்துழந்து அட்ட மாமறி பிண்டம் வாலுவன் ஏந்த, வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம் |
10 |
வெவ்வாய்ப் பெய்த பூதநீர் சால்க எனப் புலவுக்களம் பொலிய வேட்டோய்! நின் நிலவுத்திகழ் ஆரம் முகக்குவம் எனவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 370 | 371 | 372 | 373 | 374 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 372. ஆரம் முகக்குவம் எனவே!, இலக்கியங்கள், முகக்குவம், ஆரம், புறநானூறு, வேள்வி, மண்டை, எட்டுத்தொகை, சங்க