முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 58. மன்னவன் நாட்டுச் செல்வமும் அதற்கேற்ற அவனது
கொடையும் கூறுதல்
பதிற்றுப்பத்து - 58. மன்னவன் நாட்டுச் செல்வமும் அதற்கேற்ற அவனது கொடையும் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : ஏ விளங்கு தடக்கை
ஆடுக, விறலியர்! பாடுக, பரிசிலர்!- வெண் தோட்டு அசைத்த ஒண் பூங் குவளையர், வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர், செல் உறழ் மறவர் தம் கொல்படைத் தரீஇயர், 'இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின், நாளை |
5 |
மண் புனை இஞ்சி மதில் கடந்தல்லது உண்குவம்அல்லேம், புகா' எனக் கூறி, கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்; பொய் படுபு அறியா வயங்கு செந் நாவின், எயில் எறி வல் வில், ஏ விளங்கு தடக் கை, |
10 |
ஏந்து எழில் ஆகத்துச் சான்றோர் மெய்ம்மறை; வானவரம்பன் என்ப-கானத்துக் கறங்கு இசைச் சிதடி பொரி அரைப் பொருந்திய சிறியிலை வேலம் பெரிய தோன்றும் புன்புலம் வித்தும் வன் கை வினைஞர் |
15 |
சீருடைப் பல் பகடு ஒலிப்பப் பூட்டி, நாஞ்சில் ஆடிய கொழு வழி மருங்கின் அலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம், அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 56 | 57 | 58 | 59 | 60 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - விளங்கு, வண்ணம்