முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 57. வென்றிச் சிறப்பொடு கொடைச் சிறப்பும் உடன்
கூறுதல்
பதிற்றுப்பத்து - 57. வென்றிச் சிறப்பொடு கொடைச் சிறப்பும் உடன் கூறுதல்
துறை : விறலி ஆற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : சில் வளை விறலி
ஓடாப் பூட்கை மறவர் மிடல் தப, இரும் பனம் புடையலொடு வான் கழல் சிவப்ப, குருதி பனிற்றும் புலவுக் களத்தோனே, துணங்கை ஆடிய வலம் படு கோமான்: மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கிச் |
5 |
செல்லாமோதில்-சில் வளை விறலி!- பாணர் கையது பணி தொடை நரம்பின் விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி, குரல் புணர் இன் இசைத் தழிஞ்சி பாடி; இளந் துணைப் புதல்வர் நல் வளம் பயந்த, |
10 |
வளம் கெழு குடைச்சூல், அடங்கிய கொள்கை, ஆன்ற அறிவின் தோன்றிய நல் இசை, ஒள் நுதல் மகளிர் துனித்த கண்ணினும், இரவலர் புன்கண் அஞ்சும் புரவு எதிர்கொள்வனைக் கண்டனம் வரற்கே? |
15 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 55 | 56 | 57 | 58 | 59 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - விறலி, வளம், வண்ணம், சில்