முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 59. வென்றிச் சிறப்பு
பதிற்றுப்பத்து - 59. வென்றிச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : மா கூர் திங்கள்
பகல் நீடு ஆகாது, இரவுப்பொழுது பெருகி, மாசி நின்ற மா கூர் திங்கள், பனிச் சுரம் படரும் பாண்மகன் உவப்ப, புல் இருள் விடிய, புலம்பு சேண் அகல, பாய் இருள் நீங்க, பல் கதிர் பரப்பி, |
5 |
ஞாயிறு குணமுதல் தோன்றியாஅங்கு, இரவல் மாக்கள் சிறுகுடி பெருக, உலகம் தாங்கிய மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை! வீற்று இருங் கொற்றத்துச் செல்வர் செல்வ! சேர்ந்தோர்க்கு அரணம்!- |
10 |
அறியாது எதிர்ந்து, துப்பில் குறையுற்று, பணிந்து திறை தருப, நின் பகைவர், ஆயின்; சினம் செலத் தணியுமோ? வாழ்க, நின் கண்ணி!- பல் வேறு வகைய நனந் தலை ஈண்டிய மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும் |
15 |
ஆறு முட்டுறாஅது, அறம் புரிந்து ஒழுகும் நாடல் சான்ற துப்பின் பணைத் தோள், பாடு சால் நன் கலம் தரூஉம் நாடு புறந்தருதல் நினக்குமார் கடனே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 57 | 58 | 59 | 60 | 61 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நின், இருள், திங்கள், கூர், வண்ணம்