முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 380. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 380. பாலை - தோழி கூற்று
(தலைவன் முன்பனிப் பருவத்தே வருவதாகக் கூறிச்சென்றானாகக்கூதிர்ப்பருவத்தின் இறுதியில் தோழி தலைவியை நோக்கி, “இனி, முன்பனிப் பருவம் வரும்; தலைவர் நம்மை நினைந்திலர்; என் செய்வேம்!” என்று கூறியது.)
விசும்புகண் புதையப் பாஅய் வேந்தர் வென்றெறி முரசின் நன்பல முழங்கிப் பெயலா னாதே வானம் காதலர் நனிசேய் நாட்டர் நம்முன் னலரே யாங்குச்செய் வாங்கொல் தோழி யீங்கைய |
5 |
வண்ணத் துய்ம்மலர் உதிர முன்னர்த் தோன்றும் பனிக்கடு நாளே. |
|
- கருவூர்க் கதப்பிள்ளை. |
முடிபு: தோழி, வானம் பெயல் ஆனாது; காதலர் நனி சேய் நாட்டர்; நம் முன்னலர்; பனிக்கடு நாளில் யாங்குச் செய்வோம்!
கருத்து: தலைவர் தாம் குறித்த பருவத்தே வாராராயின் என் செய்வேம்!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 378 | 379 | 380 | 381 | 382 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 380. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், பாலை, தலைவர், குறுந்தொகை, வானம், கூற்று, காதலர், பனிக்கடு, நாட்டர், முன்பனிப், எட்டுத்தொகை, சங்க, பருவத்தே, செய்வேம்