முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 345. நெய்தல் - தோழி கூற்று
குறுந்தொகை - 345. நெய்தல் - தோழி கூற்று
(பகலில் வந்து தலைவியைக் கண்டு அளவளாவிச் செல்லும்வழக்கத்தையுடைய தலைவனை நோக்கி, "நீ இனி இரவில் வந்து இங்கேதங்கிச் செல்க" என்று தோழி கூறியது.)
இழையணிந் தியல்வருங் கொடுஞ்சி நெடுந்தேர் வரைமருள் நெடுமணல் தவிர்த்துநின் றசைஇத் தங்கினி ராயின் தவறோ தெய்ய தழைதாழ் அல்குல் இவள்புலம் பகலத் தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங்கழி |
5 |
இழுமென ஒலிக்கும் ஆங்கண் பெருநீர் வேலியெம் சிறுநல் லூரே. |
|
- அண்டர்மகன் குறுவழுதியார். |
முடிபு: தவிர்த்து நின்று அசைஇ, புலம்பு அகல நல்லூரில் தங்கினிராயின் தவறோ!
கருத்து: இனி நீர் இரவில் வந்து தலைவியோடு அளவளாவுவீராக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 343 | 344 | 345 | 346 | 347 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 345. நெய்தல் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, நெய்தல், வந்து, குறுந்தொகை, கூற்று, தவறோ, தாழை, சங்க, எட்டுத்தொகை, இரவில்