முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 297. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 297. குறிஞ்சி - தோழி கூற்று
(தோழி, “இனித் தலைவனுடன் சென்று அவனை மணந்து வாழ்தலே செயற்குரியது” என்று தலைவிக்குக் கூறியது.)
அவ்விளிம் புரீஇய கொடுஞ்சிலை மறவர் வைவார் வாளி விறற்பகை பேணார் மாறுநின் றிறந்த ஆறுசெல் வம்பலர் உவலிடு பதுக்கை ஊரின் தோன்றும் கல்லுயர் நனந்தலை நல்ல கூறிப் |
5 |
புணர்ந்துடன் போதல் பொருளென உணர்ந்தேன் மன்றவவர் உணரா வூங்கே. |
|
- காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார். |
முடிபு: நனந்தலை, கூறிப்போதல் பொருளென அவர் உணராவூங்கே உணர்ந்தேன்.
கருத்து: தலைவனுடன் சென்று நீ மணத்தலே நன்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 295 | 296 | 297 | 298 | 299 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 297. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், குறிஞ்சி, கூற்று, உணர்ந்தேன், குறுந்தொகை, நல்ல, பொருளென, நனந்தலை, தலைவனுடன், எட்டுத்தொகை, சங்க, சென்று