அகநானூறு - 316. மருதம்
'துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை, அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு ஈர்ந் தண் எருமைச் சுவல் படு முது போத்து, தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுது பட, பைந் நிண வராஅல் குறையப் பெயர்தந்து, |
5 |
குரூஉக் கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப் போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன் தேர் தர வந்த, தெரிஇழை, நெகிழ் தோள், ஊர் கொள்கல்லா, மகளிர் தரத் தர, பரத்தைமை தாங்கலோ இலென்' என வறிது நீ |
10 |
புலத்தல் ஒல்லுமோ? மனை கெழு மடந்தை! அது புலந்து உறைதல் வல்லியோரே, செய்யோள் நீங்க, சில் பதம் கொழித்து, தாம் அட்டு உண்டு, தமியர் ஆகி, தே மொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப, |
15 |
வைகுநர் ஆகுதல் அறிந்தும், அறியார் அம்ம, அஃது உடலுமோரே! |
தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை நெருங்கிச் சொல்லியது. -ஓரம்போகியார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 314 | 315 | 316 | 317 | 318 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -