அகநானூறு - 230. நெய்தல்
'உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த சிறு கரு நெய்தற் கண் போல் மா மலர்ப் பெருந் தண் மாத் தழை இருந்த அல்குல், ஐய அரும்பிய சுணங்கின், வை எயிற்று, மை ஈர் ஓதி, வாள் நுதல், குறுமகள்! |
5 |
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு, மனை புறந்தருதிஆயின், எனையதூஉம், இம் மனைக் கிழமை எம்மொடு புணரின், தீதும் உண்டோ, மாதராய்?' என, |
10 |
கடும் பரி நல் மான், கொடிஞ்சி நெடுந் தேர் கை வல் பாகன் பையென இயக்க, யாம் தற் குறுகினமாக, ஏந்து எழில் அரி வேய் உண் கண் பனி வரல் ஒடுக்கி, சிறிய இறைஞ்சினள், தலையே |
15 |
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே. |
தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 228 | 229 | 230 | 231 | 232 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - யாம்