சிறுபாணாற்றுப்படை - பத்துப்பாட்டு
யாழ் வாசித்து, அரசனைப் புகழ்ந்து பாடுதல்
பைங்க ணூகம் பாம்புபிடித் தன்ன வங்கோட்டுச் செறிந்த வவிழ்ந்துவீங்கு திவவின் மணிநிரைத் தன்ன வனப்பின் வாயமைத்து வயிறுசேர் பொழுகிய வகையமை யகளத்துக் கானக் குமிழின் கனிநிறங் கடுப்பப் |
225 |
புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய் தமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பிற் பாடுதுறை முற்றிய பயன்றெரி கேள்விக் கூடுகொ ளின்னியங் குரல்குர லாக நூனெறி மரபிற் பண்ணி யானாது |
230 |
நல்லியக்கோடன் முன்னிலையில் யாழ் மீட்டுங்கள். பல இசைக்கருவிகளும் ஒத்தியங்க மீட்டுங்கள். ஏழு பண்களில் முதல் பண்ணாகிய குரல் பண்ணில் தொடங்கி வாயிலிருந்து பாடிவரும் குரலிசைக்கு ஏற்ப யாழ் மீட்டிப் பண் பாடுங்கள். பாடிப்பாடிப் பண்ணின் துறைகளில் முதிர்ச்சி பெற்றவர்கள் நீங்கள். இசைநூல்களில் கூறப்படும் மரபுப்படி பாடுபவர்கள் நீங்கள். உங்களிடம் உள்ளது பண்ணின் பயன் தெரிந்த கேள்வி. (யாழ்) கேள்வியாழ் ஊகக் குரங்கு போலவும், யாழில் கட்டப்பட்டுள்ள நரம்பு அக்குரங்கு பிடித்திருக்கும் பாம்பு போலவும் காணப்படும். பாம்பின் தலையும் வாலும் வெளியில் நீட்டுக் கொண்டிருக்கும்படி குரங்கு யாழைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, யாழில் கட்டியிருக்கும் நரம்பு மேலும் கீழும் அவிழ்ந்திருக்கும். யாழ் வளைவின் உள்பகுதி யாழுக்கு வயிறு. அதன் அகலப் பகுதியில் குமிழம் பழம் போல் நரம்பைக் கட்டியிருக்கும் திருகாணிகள் இருக்கும். அந்த ஆணிகள் யாழில் திருகப்பட்டிருக்கும் துளைப்பகுதியில் நீலநிற மணிகளை வரிசைப்படுத்தி வைத்திருப்பது போன்ற துளைவட்டங்கள் இருக்கும். இத்தகைய வனப்புள்ள யாழைப் போர்த்தியிருக்கும் பச்சை நிறப் போர்வையில் புகழத்தக்க கைவினை வேலைப்பாடுகள் பொதிந்திருக்கும். தாயின் முலைநரம்புகளில் அமிழ்தம் பொதிந்திருக்கும். குழந்தைக்கு இலிற்றும் அமிழ்தம் ஒருவகை. கணவனுக்கு இலிற்றும் அமிழ்தம் ( தேன் ) மற்றொரு வகை. அதுபோல அடங்கிச் சுருண்ட யாழின் நரம்புகளிலிருந்து அமிழ்தம் இலிற்றும். மேலும் இந்த அமிழ்தத்தில் தேனும் கலக்கப்பட்டிருக்கும். குரலிசைக்கு ஏற்பக் குரல் பண்ணிசையில் தொடங்கிப் பாடுங்கள்.
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை யெனவு மிளையோர்க்கு மலர்ந்த மார்பினை யெனவு மேரோர்க்கு நிழன்ற கோலினை யெனவுந் தேரோர்க் கழன்ற வேலினை யெனவு நீசில மொழியா வளவை, மாசில் |
235 |
அவன் முன் நீங்கள் பாடும்போது இயல்பாகவே உள்ள அவனது பண்புகளைப் பாராட்டிச் சில சொற்களைக் கூறுவீர்கள். முதியோரை வணங்க மொட்டுப்போல் மூடிக் கும்பிடும் கையையுடையவனே! இளையோரைத் தழுவுவதற்காக மலர்ந்து விரியும் மார்பினை உடையவனே! உழவர்களுக்கு நிழல் தரும் செங்கோலை உடையவனே! தேர்ப்படை எதிரிகள் முன் அழல் கக்கும் வேலினை உடையவனே! இப்படி ஒருசில சொல்லத் தொடங்கும் போதே அவன் கொடை நல்கத் தொடங்கிவிடுவான்.
பாணர் முதலியோர்க்கு அவன் உண்டி முதலியன கொடுத்தல்
காம்புசொலித் தன்ன வறுவை யுடீஇப் பாம்புவெகுண் டன்ன தேற னல்கிக் காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப் பூவிரி கச்சைப் புகழோன் றன்முன் பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட் |
240 |
பனுவலின் வழாஅப் பல்வே றடிசில் வாணிற விசும்பிற் கோண்மீன் சூழ்த்த விளங்கதிர் ஞாயி றெள்ளூந் தோற்றத்து விளங்குபொற் கலத்தில் விரும்புவன பேணி யானா விருப்பிற் றனின் றூட்டித் |
245 |
முதலில் புத்தாடை உடுத்திக்கொள்ளச் செய்வான். அது மூங்கிலில் உரியும் தோல் போல் இருக்கும். பாம்பு வெகுண்டால் கடிக்கும். கடிபட்டவர் வாயில் நுரை தள்ளும். அந்த நுரையைப் போல நுதிக்கும் அரிசிச் சோற்றுக் கஞ்சித் தேறலை நல்குவான். ( இது இக்காலத்தில் உணவிடுவதற்கு முன்பு வழங்கப்படும் சூப் போன்றது. ) பின்னர் பொன் வட்டிலில் அடிசில் படைக்கப்படும். ஒளி மிக்க வானத்தில் கோளும் மீனும் சூழ்ந்து விளங்குவது போல பொன்வட்டில்களைப் பரப்பி அதில் உணவு அளிக்கப்படும். கறிகாய்க்கூட்டுப் பொறியலுடன் கூடிய உணவுக்கு அடிசில் என்று பெயர். அந்த அடிசில் முன்னோன் ஒருவன் எழுதிய சமையல் நூலில் கூறப்பட்டுள்ள முறைமையிலிருந்து சற்றும் வழுவாமல் சமைக்கப்பட்டது. அந்த ஒருவன் தனது அம்பை எய்து காட்டை எரியூட்டியவன். அவன் எய்த அம்பு பிளவுபட்ட கவட்டை முனை கொண்டது. அவன் தன் தோளின் பின்புறம் அம்பறாத் தூணியை அணிந்திருந்தான். மலர்ந்த பூமாலைக் கச்சத்தைத் தன் இடுப்பில் கட்டியிருந்தான். இவனது அண்ணன்தான் அடிசில் நூலின் படைப்பாளி. இவன் பனிவரை மார்பன் என்று சிறப்பித்துக் கூறப்படுபவன். அவன் தன் நூலில் சமையல் கலையின் நுட்பங்களைக் குறிப்பிட்டிருந்தான். (சமையல் நூலின் ஆசிரியன் யார் என்பது விளங்கவில்லை, கா எரியூட்டியவன் அருச்சுனன் அவன் அண்ணன் வீமன் சமையல் கலையில் வல்லவன் என்றும் கூறப்படிகிறது. ) கா எரியூட்டியவன் நளன் என்றால் அவனது அண்ணன் சமையல் நூலை எழுதியவன் என முனியும். இந்த சமையல்நூல் குறிப்புகளில் பழகிச் சமைத்த உணவை நல்லியக்கோடன் தானே முன்னின்று உங்களுக்கு ஊட்டுவான். ஊட்டுவதில் அவனுக்கிருந்த ஆசை நிறைவடைவதே யில்லை. இன்னும் ஊட்டியிருக்கலாம் , இப்படி இப்படியெல்லாம் ஊட்டியிருக்கலாம் என்று தனக்குத்தானே குறைபட்டுக் கொள்ளும் ஆசை கொண்டவன்.
நல்லியக்கோடன் அளிக்கும் பரிசில்
திறல்சால் வென்றியொடு தெவ்வுப்புல மகற்றி விறல்வேன் மன்னர் மன்னெயின் முருக்கி நயவர் பாணர் புன்கண் டீர்த்தபின் |
நயவர்கள் எனப்படுவோர் பகைவர்களை அகன்றோடச் செய்தும், வேல் வலிமை மிக்க மன்னர்களின் கோட்டையைத் தாக்கியும் தன் திறமை மிகுதியால் வெற்றி கண்டவர்கள். இப்படித் தன்னை நயந்து தனக்குத் துணையாக இருக்கும் நயவர்களுக்கும், பாணர்களுக்கும் ஊட்டுவான். பரிசும் வழங்குவான்.
வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி |
250 |
யுருவ வான்மதி யூர்கொண் டாங்குக் கூருளி பொருத வடுவாழ் நோன்குறட் டாரஞ் சூழ்ந்த வயில்வாய் நேமியொடு சிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத் ததர்பிணி யவிழ்ந்த தோற்றம் போல |
255 |
வுள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வைக் கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி யூர்ந்துபெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு மாசெல வொழிக்கு மதனுடை நோன்றாள் வாண்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ |
260 |
யன்றே விடுக்குமவன் பரிசின், மென்றேட் |
பரிசில் பெறுவதற்காகக் காத்திருக்க வைக்காமல் அன்றே பரிசில் நல்கி அனுப்பி வைப்பான். பரிசுப் பொருள்களையும் உங்களையும் பாண்டில்-வண்டியில் ஏற்றி அனுப்பி வைப்பான். அவன் தரும் பரிசுப் பொருள்கள், வீரர்களின் திறத்தால் பெற்றவை. இது மாடு பூட்டிய பாண்டில் நல்லியக்கோடன் பரிசிலுடன் ஏற்றி அனுப்பிவைப்பது குதிரை பூட்டிய பாண்டில் பாண்டில் (கூட்டுவண்டி) அவற்றைப் பரிசில் பொருள்களாக ஏற்றி அனுப்பிவைக்கும் வண்டி கார்மேகம் கவிந்த வானத்தில் பால்கதிர் பரப்பிக்கொண்டு உலாவரும் மதியம் போலச் செல்லும். வண்டிச் சக்கரத்தின் ஆரைக்கால் குடத்தில் பொருத்தப்பட்டிருக்கும். அந்தக் குடம் கூர் உளிக் குறடு கொண்டு செதுக்கிய வேலைப்பாடு கொண்டது. இப்படிச் செதுக்கியவர் கருந்தொழில் வினைஞர். இது கைத்திறத் தொழில் (கைவினை). முருக்கம் பூ பூத்திருப்பது போன்ற வேலைப்பாடுகள் சக்கரக் குடத்திலும், பாண்டில் வண்டி மூடாக்கிலும் உண்டு. பாண்டில்-வண்டிப் போர்வைத் துணியிலும் சிவப்புத் துணிக் கலைத்தொழில் நிறைந்திருக்கும். குதிரை பூட்டிய அந்தப் பாண்டில்-வண்டியை ஓட்டிச் செல்ல ஓட்டிப் பழக்கப்பட்ட பாகனையும் அவனே அனுப்பி வைப்பான். பாண்டிலானது வாள் போன்ற முகப்புத் தோற்றம் கொண்டிருக்கும். போகும்போது நடந்து செல்கிறீர்கள். வரும்போது தேரில் வருவீர்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபாணாற்றுப்படை - பத்துப்பாட்டு, அவன், பாண்டில், சமையல், யாழ், பரிசில், அந்த, அமிழ்தம், அடிசில், இருக்கும், நல்லியக்கோடன், இலக்கியங்கள், பத்துப்பாட்டு, சிறுபாணாற்றுப்படை, எரியூட்டியவன், யெனவு, இலிற்றும், கைவினை, யாழில், ஏற்றி, பூட்டிய, தன்ன, வைப்பான், நீங்கள், உடையவனே, அனுப்பி, மிக்க, ஒருவன், நூலில், வானத்தில், பரப்பி, ஊட்டுவான், பரிசுப், குதிரை, வண்டி, வினைஞர், ஊட்டியிருக்கலாம், நூலின், அண்ணன், மார்பன், கொண்டது, வேலினை, போலவும், குரங்கு, நரம்பு, பாம்பு, யாழைப், பண்ணின், பாடுங்கள், சங்க, மீட்டுங்கள், குரல், குரலிசைக்கு, கட்டியிருக்கும், மேலும், அவனது, தரும், இப்படி, பாணர், முன், மார்பினை, போல், வேலைப்பாடுகள், பொதிந்திருக்கும், மலர்ந்த, பனிவரை