சிறுபாணாற்றுப்படை - பத்துப்பாட்டு
ணறுவீ நாககு மகிலு மாரமுந் துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகிய பொருபுன றரூஉம் போக்கரு மரபிற் றொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய நன்மா விலங்கை மன்ன ருள்ளும் |
120 |
மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வா ளுறுபுலித் துப்பி னோவியர் பெருமகன் களிற்றுத்தழும் பிருந்த கழறயங்கு திருந்தடிப் பிடிக்கணஞ் சிதறும் பெயல்மழைத் தடக்கைப் பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை |
125 |
நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு |
புரவலனிடம் பரிசுபெறச் சென்ற விதம்
தாங்கரு மரபிற் றன்னுந் தந்தை வான்பொரு நெடுவரை வளனும் பாடி முன்நாள் சென்றன மாக, விந்நா |
தொன்மாவிலங்கை என்பது இலங்கைத் தீவு. நன்மாவிலங்கை என்பது தமிழ் நாட்டிலுள்ள ஓர் ஊர். இலங்கைத் தீவில் கருவுற்ற ஒருவன் தமிழ் நாட்டிலுள்ள ஊருக்குக் குடிபெயர்ந்து வந்து தலைமை ஏற்றபோது தன் தலைநகருக்கு மாவிலங்கை என்னும் பெயரைச் சூட்டினான். நல்லியக்கோடன் காலத்தில் இப்பகுதியில் ஓவியர் குடியின மக்கள் வாழ்ந்து வந்தனர். ஓ என்னும் சொல் ஏரியின் மதகுகளை அடைக்கும் பலகையைக் குறிக்கும். ஏரியை நம்பி வாழும் இப்பகுதி மக்கள் ஓவியர் எனப்பட்டனர். (ஓ – ஓவம் – ஓவியம் – ஓவியர் என்றும் எண்ணிப் பார்க்கலாம். )
நல்லிநக்கோடனின் மாவிலங்கை நாட்டில் ஓடிய ஆற்றில் நாகம், அகில், சந்தனம் முதலான மரக்கட்டைகள் மிதந்து வந்தன. அம் மரங்கள் நீராடுவோருக்கு மிதவைப் புணைகளாகப் பயன்பட்டன. காதலன் தோளைத் தருவிக்கொண்டு விளையாடுவது போல மகளிர் அம் மரக்கட்டைகளைப் பற்றிக்கொண்டு விளையாடினர். பொருபுனல் ஓடிற்று என்று பாடல் கூறுவதால் அது காட்டாறாக இருக்க வேண்டும். ஓவியர் குடி குற்றவடு நேராதபடி அரசாண்ட குடி. வாய்மை காத்துப் புகழோடு விளங்கிய குடி. பகைவர்கள் அஞ்சும்படி புலிபோல் வலிமை பெற்று விளங்கிய குடி. நல்லியக்கோடனின் கால்களில் யானையைக் குதிக்காலால் தட்டி ஓட்டிய கால் தழும்பு இருந்தது. அதில் அவன் வீரக் கழலை அணிந்திருந்தான். காலிலோ களிற்றுத் தழும்பு. கைகள் தந்ததோ பிடிக்கணம். பெய்யும் மழை நீரைச் சிதறுவது போல இவனது கைகள் தாரை வார்த்துத் தரும் நீரில் பிடிக்கணங்கள் (பெண்யானைகள்) கொடைப் பொருள்களாகக் கொட்டித் தரப்பட்டன. கூத்தாடுவோருக்கு அந்தக் கொடை யானைகள் வழங்கப்பட்டன. நல்லியக்கோடனை விரும்பி அவனிடம் முன்பொரு காலத்தில் நானும் எனது சுற்றத்தாரும் சென்றோம். அவனைப் புகழ்ந்து பாடினோம். அவன் எங்களது தகுதியை எண்ணிப் பார்க்கவில்லை. மாறாகத் தன்னுடைய தகுதியை எண்ணிப் பார்த்தான். தன் தந்தை தனக்கு வைத்துவிட்டுச் சென்ற வானளாவிய மலைபோன்ற செல்வத்தை அளவிட்டுக் கொண்டான். வழங்கினான்.
வருத்தம் போக்கிய வண்மைச் சிறப்பு
டிறவாக் கண்ண சாய்செவிக் குருளை | 130 |
கறவாக் பால்முலை கவர்த னோனாது புனிற்றுநாய் குரைக்கும் புல்லெ னட்டில் காழ்சோர் முதுசுவர்க் கணச்சித லரித்த பூழி பூத்த புழற்கா ளாம்பி யொல்குபசி யுழந்த வொடுங்குநுண் மருங்குல் |
135 |
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த குப்பை வேளை யுப்பிலி வெந்ததை மடவோர் காட்சி நாணிக் கடையடைத் திருக்பே ரொக்கலொ டொருங்குடன் மிசையு மழிபசி வருத்தம் வீடப் பொழிகவுட் |
140 |
டறுகட் பூட்கைத் தயங்குமணி மருங்கிற் சிறுகண் யானையொடு பெருந்தே ரெய்தி யாமவ ணின்றும் வருதும், நீயிரு |
எயிற்பட்டினத்தில் கிடைக்கும் பொருள்கள்
மிவணயந் திருந்த விரும்பே ரொக்கற் செம்ம லூள்ளமொடு செல்குவி ராயி |
145 |
எங்களது வீட்டுநாய் எங்கள் வீட்டுச் சமையலறையில் குட்டி போட்டிருந்தது. கண்ணைக்கூடத் திறவாத அந்த நாய்க்குட்டிகள் தாயின் மடியில் பால் குடிக்கக் கவ்விச் சுவைத்தன. தாய்நாயின் மடியில் பால் இல்லாத்தால் வலி பொறுக்க முடியாமல் அது தன் குட்டிகளையை பார்த்துக் குரைத்தது. வைரம் பாய்ந்தது போன்ற எங்களது வீட்டுச் சுவர் கட்டுடைந்து கறையான் அரித்த புழுதியோடு காளான் பூத்திருந்தது. உடுக்கை அடித்துக்கொண்டு ஆடும் என் மனைவியின் வயிறு பசியால் ஒடுங்கி இளைத்த இடையோடு ஒட்டிப்போயிருந்தது. அவள் குப்பையில் முளைத்திருந்த வேளைக் கீரையைத் தன் வளைந்த நகத்தால் கிள்ளி வந்தாள். உப்புக்கூட இல்லாமல் அதனை வேகவைத்தாள். இதைப்போய் சாப்பிடுகிறார்களே என்று அறிவுக் குறைந்த மடவோர் ஏளனம் செய்வார்களே என்று எண்ணி வாயில் கதவைச் சாத்தி வைத்துவிட்டுப் பெருஞ் சுற்றத்தாரோடு கூடியிருந்து உண்ணக்கூட முடியாமல் ஏதோ பிசைந்து கவளமாக்கிக் கன்னத்தில் கண்ணீர் வழிய விழுங்கிக் கொண்டிருந்தோம். இதுதான் எங்கள் குடும்பத்தின் அந்நாளைய அழிபசி வருத்தம். ( இந்த விளக்கத்தின் மூலமாகக் குடும்பத்தின் வறுமைநிலை விளக்கப்படுகிறது )
அன்று எங்கள் கன்னத்தில் கண்ணீர் வழிந்தது. அதை மாற்றுவானாய் நல்லியக்கோடன் கன்னத்தில் கண்ணின் மதம் வழியும் யானையைப் பரிசாகத் தந்தான். அஞ்சாமைக் குணம் பூண்டிருக்கும் யானையைத் தந்தான். யானையோடு தேரும் தந்தான். இப்போது நாங்கள் செம்மாப்போடு யானைமீதும் தேர்மீதும் வந்து கொண்டிருக்கிறோம். நீங்களும் இங்கு வருந்திக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு உங்களது சுற்றத்தாரோடு செம்மாந்த உள்ளம் கொண்டு அவனிடம் செல்லுங்கள்.
னலைநீர்த் தாழை யன்னம் பூப்பவுந் தலைநாட் செருந்தி தமனியம் மருட்டவுங் கடுஞ்சூன் முண்டகங் கதிர்மணி கழாஅலவும் நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவும் கானல் வெண்மணல் கடலுலாய் நிமிர்தரப் |
150 |
பாடல் சான்ற நெய்த னெடுவழி மணிநீர்ப் வைப்பு மதிலொடு பெயரிய பனிநீர்ப் படுவின் பட்டினம் படரி |
நீங்கள் நல்லியக்கோடன் ஊருக்குச் செல்லும் வழியில் எயிற்பட்டினத்தின் வழியாகச் செல்ல வேண்டி இருக்கும். அதனை அடைய நெய்தல்நிலப் பெருவழியில் செல்ல வேண்டி வரும். அங்கே அலைமோதும் நீரில் தாழம்பூ அன்னப்பறவை போல் பூத்திருக்கும். அன்று பூத்த செருந்திப் பூக்கள் பொன் கொட்டிக் கிடப்பதுபோல் கிடந்து மருட்சியூட்டும். முண்டகப் ப்பூக்களைக் கதிர்மணிகள் என்று எண்ணிக் கடல் அலைகள் கழுவிக்கொண்டிருக்கும். புன்னைமரம் பூத்து முத்துக்களைத் தலையில் வைத்திருக்கும். கடற் கானல் வெண்மணலில் கடல்லை வந்து உலாவிக் கொண்டிருக்கும். அந்த நெய்தல் நிலப் பொருவழியில் சென்றால் கடலின் மணிநீர் சார்ந்த நிலத்தில், பனிநீர்ப் (நன்னீர்) பள்ளத்தில் இருக்கும் பட்டினம் ஒன்றை அடையலாம். அது மதிலொடு பெயரிய பட்டினம். (மதில் = எயில் | மதிலின் பெயர் இணைந்துள்ள பட்டினம் | எயிற்பட்டினம்). அங்குச் சென்றால்,
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபாணாற்றுப்படை - பத்துப்பாட்டு, பட்டினம், ஓவியர், இலக்கியங்கள், குடி, எண்ணிப், வந்து, நல்லியக்கோடன், சிறுபாணாற்றுப்படை, எங்கள், தந்தான், கன்னத்தில், தமிழ், பத்துப்பாட்டு, வருத்தம், பெயரிய, எங்களது, விளங்கிய, முடியாமல், மடியில், வீட்டுச், அந்த, சுற்றத்தாரோடு, பால், அன்று, வேண்டி, இருக்கும், சென்றால், செல்ல, பனிநீர்ப், குடும்பத்தின், கானல், கண்ணீர், கைகள், இலங்கைத், நாட்டிலுள்ள, மாவிலங்கை, என்பது, தந்தை, சங்க, மரபிற், சென்ற, என்னும், காலத்தில், நீரில், அவனிடம், தகுதியை, அவன், தழும்பு, மக்கள், பாடல், பூத்த