குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு
மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழு தேமுறு வஞ்சினம் வாய்மையிற் றேற்றி |
210 |
யந்தீந் தெண்ணீர் குடித்தலி னெஞ்சமர்ந் தருவிட ரமைந்த களிறுதரு புணர்ச்சி வானுரி யுறையுள் வயங்கியோ ரவாவும் பூமலி சோலை யப்பகல் கழிப்பி யெல்லை செல்ல வேழூர் பிறைஞ்சிப் |
215 |
பல்கதிர் மண்டிலங் கல்சேர்பு மறைய |
அறப்புணையில் செல்லலாம் என்று சொல்லித் தேற்றியபின் அதனை உறுதிப்படுத்துவானாய் மலைத்தெய்வம் முருகன் பெயரைச்சொல்லி முருகனையும் என்னையும் வாழ்த்தினான். அவனையும் என்னையும் தொழுதான். சொன்னசொல் தவறமாட்டேன் என்று வஞ்சினம் கூறினான். அதனை என் நெஞ்சம் விரும்பியது. துன்பம் இன்பமாக மாறியது. யானை தந்த புணர்ச்சி இது. வானம் எங்களுக்கு ஆடையாயிற்று. மயங்கியவர்கள் விரும்பும் பூஞ்சோலையில் அன்றைய பகல் பொழுதை அவனோடு கழித்தேன். ஞாயிறு மேலைமலையில் மறைந்தது.
மாலைக்காலத்தின் வருகை
மான்கண மரமுதற் றெவிட்ட வான்கணங் கன்றுபயிர் குரல மன்னுநிறை புகுதர வேங்குவயி ரிசைய கொடுவா யன்றி லோங்கிரும் பெண்ணை யகமட லகவப் |
220 |
பாம்புமணி யுமிழப் பல்வயிற் கோவல ராம்பலந் தீங்குழற் றெள்விளி பயிற்ற வாம்ப லாயிதழ் கூம்புவிட வளமனைப் பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி யந்தி யந்தண ரயரக் கானவர் |
225 |
பொழுது போனபின் இரவும் பகலும் மால்-மயங்கம் கொள்ளும் மாலைக்காலம் வந்தது. மான்கூட்டம் மரத்தடியில் படுத்துக்கொண்டு அசைபோட்டது. பசுக்கள் கன்றுகளுக்காகக் கனைத்துக்கொண்டே மன்று திரும்பின. அன்றில்கள் பெண்ணைமரத்தில் இருந்துகொண்டு அகவின. அக்குரல் கொம்பூதுவது போல் இருந்தது. பாம்புகள் வெளிச்சத்துக்காக மணியைக் ககக்கின. (நம்பிக்கை) கோவலர் ஆம்பல்கொடியில் செய்த புல்லாங்குழலை ஊதிக்கொண்டும், இடையிடையே தம் ஆனிரைகளைத் தெளிவாகப் பெயர்சொல்லி விளித்து அவற்றை விரைந்து செல்லுமாறு தூண்டிப் பயிற்றுவித்துக் கொண்டும் சென்றனர். ஆம்பல் பூவின் போது விரியத் தொடங்கியது. வளமனைகளில் வாழும் மகளிர் விளக்கேற்றித் தூண்டி விடலாயினர். அந்தணர்கள் அந்தி வேளையைத் தொழும் விழாவினைக் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.
விண்டோய் பணவை மிசைஞெகிழி பொத்த வானமாமலை வாய்சூழ்பு கறுப்பக் கானங் கல்லென் றிரட்டப் புள்ளின மொலிப்பச் சினைஇய வேந்தன் செல்சமங் கடுப்பத் |
மலைவயல்களில் பணவை என்னும் பந்தலின் மேல் ஏறி இருந்துகொண்டு கானவர் பயிரை அழிக்கவரும் விலங்குகளை அச்சுறுத்துவதற்காக ஞெகிழி என்னும் தீப்பந்தத்தை ஏற்றினர். வானம் கறுத்தது. புள்ளினங்கள் ‘கல்’லென ஒலித்துக்கொண்டு இருப்பிடம்நோக்கி வானமெங்கும் பறந்து சென்றன. அது சினங்கொண்ட வேந்தன் போர் முடிந்தபின் வீடு திரும்புவது போல இருந்தது.
துனைஇய மாலை துன்னுதல் காணூஉ | 230 |
தலைவன் பெயர்ந்த நிலை
நேரிறை முன்கை பற்றி நுமர்தர நாடறி நன்மண மயர்கஞ் சின்னாட் கலங்க லோம்புமி னிலங்கிழை யீரென வீர நன்மொழி தீரக் கூறித் துணைபுண ரேற்றி னெம்மோடு வந்து |
235 |
துஞ்சா முழவின் மூதூர் வாயி லுண்டுறை நிறுத்தப் பெயர்ந்தன னதற்கொண் |
நாடறியும் திருமணம் - நெருக்கமாகக் கட்டிய மாலையைப் போட்டு உன் பெற்றோர்கள் உன் முன்கைகளைப் பற்றி எனக்குத் தர நான் நாடறியும் நல்ல திருமணம் செய்துகொள்ளும் விழா எடுப்பேன். சிலநாள் கலங்காதிருப்பாயாக – என்றான். அன்பு மொழிகள் அனைத்தையும் சொன்னான். பசுவுக்குத் துணையாக வரும் காளைபோல் என்னுடன் வந்தான். ஊருக்குள் நுழையும் வாயில் வரையில் வந்தான். ஊரில் மாலைக்காலத்து முழவொலி கேட்டது. அங்கே என்னை நிறுத்திவிட்டுத் திரும்பிவிட்டான். அன்றுமுதல் ...
தலைவன் வரும் வழியின் அருமை நினைந்து, தலைவி கலங்குதல்
டன்றை யன்ன விருப்போ டென்று மிரவரன் மாலைய னேவரு தோறுங் |
அன்று முதல் இரவில் வருதல் அவனுக்கு வழக்கமாயிற்று - பின்னர், நாள்தோறும் இரவில் வந்து கெஞ்சினான் அன்று என்னை அடைந்த அதே ஆவலோடு ஒவ்வொரு நாளும் என்னிடம் வந்து என்னைத் தனக்குத் தரும்படி கெஞ்சினான். மாலைபோல் தொடர்ந்து நெருங்கிக் கேட்டான்.
காவலர் கடுகினுங் கதநாய் குரைப்பினு | 240 |
நீதுயி லெழினு நிலவுவெளிப் படினும் வேய்புரை மென்றோ ளின்றுயி லென்றும் பெறாஅன் பெயரனு முனிய லுறாஅ |
தடைகள் நேர்ந்து இவள் இன்பம் கிடைக்காவிட்டால் சலிப்பில் சினம் கோள்ளமாட்டான் - ஊர்க்காவலர் விரைந்து வரினும், புதியவனாகிய இவனைக் கண்டு சினந்து நாய் குரைப்பினும், அன்னையாகிய நீ துயில் எழுந்துவிடாலும், நடமாடுபவர் தெளிவாகத் தெரியும்படி நிலாவெளிச்சம் காய்ந்தாலும் அவன் இவளை அடைவதற்குத் தடையாக இருக்கும். இவளோடு இன்பத் துயில் கொள்ளும் வாய்ப்பு கிட்டாமல் போகும். அப்போதெல்லாம் அதற்காக அவன் சினம் கொள்ளமாட்டான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு, இலக்கியங்கள், வந்து, குறிஞ்சிப்பாட்டு, பத்துப்பாட்டு, வந்தான், வரும், நாடறியும், என்னை, திருமணம், இரவில், துயில், அவன், சினம், கெஞ்சினான், பற்றி, அன்று, வேந்தன், என்னையும், வானம், புணர்ச்சி, வஞ்சினம், சங்க, மகளிர், கானவர், பணவை, என்னும், விரைந்து, இருந்துகொண்டு, கொள்ளும், தலைவன்