களவியல் என்னும் இறையனார் அகப்பொருள்
இந்நூலுக்கு நீண்டு அகன்றதோர் உரை உள்ளது
நக்கீரர் அருளியது (என்பர்)
இ·து மிக்க தொன்மை வாய்ந்த தமிழ் உரைநடைக்கு
சான்றாக தலையாயாதாய் திகழும் இறையனார்
அகப்பொருள் உரை எனும் பெயர்தன்னால் பலர் அறிந்த
ஓர் வரலாற்றுச் பெட்டகம் ஆகும். இதனின்று இந்த
நூல் பிறந்த காரணம் வரும் 'கேட்டோர்' விளக்கப்
பகுதி மட்டும் நற்றமிழ் உலகம் நன்கறிந்த ஓன்று.
. . . . . . . . . .
. . . . . . . . . .
இனி நுதலிய பொருள் என்பது நூற்பொருளைச் சொல்லுதல் என்பது.
இந்நூல் என் நுதிலிற்றோ எனின்
தமிழ் நுதலியதென்பது கேட்டோர் யாரோ
எனின்
மதுரை உப்பூரிகிழார் மகனாவான் உருத்திர சன்மன்
என்பது.
அவன் கேட்டதற்குக் காரணம் சொல்லுதும்
தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என
மூவகைப்பட்ட சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள்
அவருள் தலைச்சங்கம் இருந்தார். அகத்தியனாரும்
திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும் குன்றெறிந்த முருகவேளும்
முரிஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும்
என இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்பதின்மர் என்ப.
அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று
நாற்பதின்மர் பாடினர் என்ப.
அவர்களால் பாடப்பட்ட எத்தனையோ.
பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும்
களரியாவிரையும் என இத்தொடக்கத்தன.
அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றி
யாண்டு சங்கம் இருந்தார் என்ப.
அவர்களைச் சங்கம் இரீஇனார் காய்சினவழுதி முதலாக
கடுங்கோன் ஈறாக எண்பத்தொன்பதின்மர் என்ப.
அவருள் கவி அரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப.
அவர் சங்கம் இருந்து தமிழ் ஆராய்ந்தது
கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப.
அவருக்கு நூல் அகத்தியம் என்ப.
இனி இடைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும், தொல்காப்பியனாரும்
இருந்தையூர் கருங்கோழியும், மோசியும், வெள்ளூர்காப்பியனும்
சிறுபாண்டரங்கனும், திரையன்மாறனும், துவரைக்கோமானும்
கீரந்தையும் என இத்தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மர் என்ப.
அவர் உள்ளிட்டு மூவாயிரத்து எழுநூற்றவர் பாடினர் என்ப.
அவர்களால் பாடப்பட்டன
கலியும் குருகும் வெண்டாளியும்
வியாழமாலை அகவலும் என இத்தொடக்கத்தன என்ப.
அவருக்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும்
மாபுராணமும் இசைநுணுக்கமும் பூதபுராணமும் எனஇவை என்ப.
அவர் மூவாயிரத்து எழுநூற்றியாண்டு சங்கமிருந்தார் என்ப.
அவரைச் சங்கம் இரீஇனார் வெண்டேர்ச்செழியன் முதலாக
முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர் என்ப.
அவருள் கவி அரங்கேறினார் ஐவர் பாண்டியர் என்ப.
அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது கபாடபுரத்து என்ப.
அக்காலத்தைப் போலும் பாண்டிய நாட்டை கடல் கொண்டது.
இனிக் கடைச்சங்கம் இருந்து தமிழாராய்ந்தார் சிறுமேதாவியாரும்
சேந்தம்பூதனாரும் அறிவுடையனாரும் பெருங்குன்றூர் கிழாரும்
இளந்திருமாறனும் மதுரையாசிரியர் நல்லந்துவனாரும்
மருதனிள நாகனாரும் கணக்காயனார் மகனார் நக்கீரனாரும்
என இத்தொடக்கத்தார் நாற்பதொன்பதின்மர் பாடினார் என்ப.
அவர்களால் பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும்
குறந்தொகை நானூறும் நற்றிணை நானூறும்
புறநானூறும் ஐங்குறுநூறும் பதிற்றுப்பத்தும்
நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலும்
கூத்தும் வரியும் சிற்றிசையும் பேரிசையும்
என்று இத்தொடக்கத்தன
அவருக்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் என்ப.
அவர் சங்கம் இருந்து தமிழ் ஆராய்தது
ஆயிரத்தொண்ணூற்றைம்பதிற்றி யாண்டு என்ப.
அவருள் கவியரங்கேறினார் முவர் பாண்டியர் என்ப.
அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரை என்ப.
அக்காலத்துப் பாண்டியநாடு பன்னீரியாண்டு வற்கடம் சென்றது
செல்லப் பசி கடுகுதலும் அரசன் சிட்டரை எல்லாம் கூவி
என்றான். என அரசனைவிடுத்து எல்லோரும்
போயின பின்றை கணக்கின்றிப் பன்னீரியாண்டு கழிந்தது
கழிந்த பின்னர் நாடு மலிய மழை பெய்தது
பெய்த பின்றை அரசன்
என்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க
எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும்
வல்லாரத் தலைப்பட்டுக் கொணர்ந்து
என வந்தார் வர அரசனும் புடைபடக் கவன்று
எனச்சொல்லா நிற்ப மதுரை ஆலவாயில்
அழல்நிறக் கடவுள் சிந்திப்பான்
என்று இவ்வறுபது சூத்திரத்தையுஞ் செய்து இவை மூன்று
செப்பிதழகத்தெழுதி பீடத்தின் கீழிட்டான்
இட்ட பின்றை ஞான்று
தேவர்குலம் வழிபடுவோன்
தேவர் கோட்டத்தை எங்கும் துடைத்து
நீர் தெளித்துப் பூவிட்டு பீடத்தின் கீழ் பண்டென்றும்
அலகிடாதான் அன்று தெய்வத் தவக்குறிப்பினான்
என உள்ளங் குளிர அலகிட்டான் இட்டதற்கு
அவ்வலகினோடும் இதழ் போந்தன
போதரக் கண்டு போந்து நோக்கினார்க்கு
வாய்ப்படைத்தாயிற்றோர்
பொருளதிகாரமாய்க் காட்டிற்று
காட்ட பார்ப்பான் சிந்திப்பான்
என்று தன் அகம் புகாதே கோயில் தலைக்கடைச் சென்று
நின்று கடைக் காப்பார்க்குணர்த்த கடைகாப்பார் அரசற்குணர்த்த
அரசன்
என்று பார்பானைக் கூவ சென்று புக்க காட்டக்
கண்டு நோக்கி
என்று அத்திசை நோக்கி தொழுது கொண்டு நின்று
சங்கத்தாரைக் கூவித்து
என
அவர்கள் அதனைக் கொண்டு போந்து கன்மாப் பலகை ஏறியிருந்து
ஆராய்வுழி எல்லோரும் தாம் தம் உரைத்த உரையே
நன்றென்று சிலநாள் சென்றன செல்ல
என
எல்லோரும் ஒருப்பட்டு அரசனுழைச்சென்றார் செல்ல
அரசனும் எதிர் எழுந்து சென்று
என
என்று அரசன் சொல்லப் போந்து
பின்னையும் கன்மாப் பலகை ஏறியிருந்து அரசனும்
என்று சிந்தித்திருப்புழி
என்று வரங்கிடப்ப இடையாமத்து
என முக்காலிசைத்த குரல் எல்லோருக்கும் உடன்பாடாயிற்றாக
எழுந்திருந்துதேவர் குலத்தை வலங்கெண்டு போந்து
உப்பூரிகிழாருழைச் சங்கமெல்லாம் சென்று
இவ்வார்த்தை எல்லாம் சொல்லி
என வேண்டிக் கொடுபோந்து வெளியது உடீஇ
வெண்பூச்சூட்டி வெண்சாந்தணிந்து கன்மாப்பலகை ஏற்றி இரீஇக்
கீழிருந்து சூத்திரப் பொருளுரைப்ப எல்லோரும் முறையே உரைப்பக் கேட்டு
வாளா இருந்து மதுரை இளநாகனார் உரைத்த இடத்து
ஒரோவழி கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் நிறுத்தி பின்னர்
கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்த இடத்து
பதந்தொறும் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான்
இருப்பஆர்ப்பெடுத்து
அதனால் உப்பூரிகிழார் மகனாவார் உருத்திர சன்மனாவான் செய்தது இந்நூற்குரை
என்பாருமுளர்
அவன் செய்திலன்
மெய்யுரை கேட்டானென்க
மதுரை ஆலவாயில் பெருமானடிகளால் செய்யப்பட்ட நூற்கு
நக்கீரனாரால் உரைகண்டு குமாரசாமியால் கேட்கப்பட்டது என்க.
அவர் தேனூர்க் கிழார்க்கு உரைத்தார்
அவர் படிமங் கொற்றானார்க்கு உரைத்தார்
அவர் செல்வத்தாசிரியர் பெருஞ்சுவனார்க்கு உரைத்தார்
அவர் மணலுராசியர் புளியங்காய் பெருஞ்சேந்தனார்க்கு உரைத்தார்
அவர் செல்லுர் ஆசிரியர் ஆண்டைப் பெருங்குமரனார்க்கு உரைத்தார்
அவர் திருக்குன்றத் தாசிரியர்க்கு உரைத்தார்
அவர் மாதவளனார் இளநாகனார்க்கு உரைத்தார்
அவர் முசிறியாசிரியர் நீலகண்டனார்க்கு உரைத்தார்
எனவே இறையனார் அகப்பொருள் எனும் பெயர் அமையப் பெற்றது போலும்
உரையின் ஆசிரியர் நக்கீரர் (அறிஞர் பலருக்கு ஐயம் உள்ளது)
சிறு அடிக்குறிப்பு
பழகும் ஏனைய சீர்மிகு நுல்களினின்றும் - பாடல்கள், சூத்திரங்கள்
பற்பலவற்றை எடுத்துக்காட்டாக வைக்கின்றார். அவர்தம் உரை
விளக்கங்களினின்று இளம்திரையம், சாதவாகனம், கலைக்கோட்டுத்
தண்டு, 'நூல்', ' நிகண்டு', செம்பூழ்சேயார்கூற்றியல், கூத்தநூல்,
சிற்றெட்டகம் எனும் நமக்கு கிடைக்காத தொன்னூற்களின் பெயர்கள்,
வேறு பல நூல் பாடல்கள் மற்றும் ஓர் அகப்பொருள் கோவை நூலின்
பெரும்பகுதி (325+பாடல்கள்) என காணக்கிடைக்கின்றன.
'பாண்டிக்கோவை' எனும் பெயரில் அவ்வகப்பொருள் நூல்
வெளிவந்துள்ளது. ஈங்கும் வெளிவரும்.
சென்னை பல்கலைகழக தமிழ்த்துறை பேராசிரியர் ஜெயதேவன்
அவர்களுக்கு நன்றி உரித்தாகுக.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
களவியல் என்னும் இறையனார் அகப்பொருள், Iraiyanar Akapporul, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்