இலக்கணச் சுருக்கம்

உதாரணம்.
மழை பெயடதெனப் புகழபெற்றது - தன்கருத்தாவின் பெயர்
மழை பெய்தென நெல் விளைந்நது - பிறகருத்தாவின் வினை
(4) செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சம் எதிர்காலத்திலே கரியப் பொருளில வந்து தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின் வினையையும் கொண்டு முடியும்.
காரியப் பொருளில் வருதலாவது முடிக்குஞ் சொல்லால் உணலப்படுந் தொழிற்கு வினையெச்சத்தால் உணரப்படும் தொழில். காரியம் என்பது பட வருதல்.
உதாரணம்.
தானுண்ணவந்தான் - தன்கருத்தாவின் பெயர்
யானுண்ணத்தந்தான் - பிறகருத்தாவின் வினை
இச்செயவென்வாய்ப்பாட் டெதிர்கால வினையெச்சம் கு என்னும் விகுதியைப் பெற்றும் வரும்.
உதாரணம்.
தானுணற்கு வந்தான் - தன்கருத்தாவின் பெயர்
யானுணற்குத் தந்தான் - பிறகருத்தாவின் வினை
உணணும்படி, உண்ணும் பொருட்டு, உண்ணும் வண்ணம், உண்ணும் வகை என்பன உணற்கென்னும் பொருள்பட வரும்.
செய்யுளிலே, இச்செயவென்வாய்ப்பாட் டெதிர்கால வினையெச்சம், இய, இயர், வான், பான், பாக்கு என்னும் விகுதிகளைப் பெற்றும் வரும். இவற்றுள் முன்னைய இரண்டு விகுதி பெற்றவை தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின்வினையையுங் கொண்டு முடியும்; பின்னைய மூன்று விகுதி பெற்றவை தன் கருத்தாவின் வினையைக் கொண்டு முடியும்.
உதாரணம்.
இயவிகுதி நீரிவைகாணியவம்மின் - தன் கருத்தாவின் வினை
அவர் காணிய வம்மின் - பிற கருத்தாவின் வினை
இயர்விகுதி நாமுண்ணியர்வந்தேம் - தன் கருத்தாவின் வினை
நீருண்ணியர் வழங்குவேம் - பிற கருத்தாவின் வினை
வான்விகுதி - தான் கொல்வான் சென்றான்
பான்விகுதி - தானலைப்பான் புகுந்தான்
பாக்குவிகுதி - தான்றருபாக்கு வருவான் தன் கருத்தாவின் வினை
(5) செயவென்வாய்ப்பாட்டு வினையெச்சம், தனக்கென நியமமாக உரிய நிகழ்காலத்திலே, இது நிகழா நிற்க இது நிகழ்ந்தது என்னும் பொருள்பட வந்து, பிறகருத்தாவின் வினையைக் கொண்டு முடியும்.
இங்கே நிகழ்காலமென்றது, முடிக்குஞ் சொல்லால் உணரப்படுந் தொழிலோடு வினையெச்சத்தால் உயரப்படுந் தொழில் முற்பிற் பாடின்றி உடனிகழ்தலை.
உதாரணம்.
சூரியனுதிக்க வந்தான் - பிறகருத்தாவின் வினை
275.செயின் என்னும் வாய்ப்பாட்டு எதிர்கால வினையெச்சங்கள், இன், ஆல், கால், கடை, வழி, இடத்து, உம் என்னும் விகுதிகளை இறுதியிற் பெற்றுக் காரணப்பொருளில் வந்து, தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின் வினையையும் பிறகருத்தாவின் வினையையும் கொண்டு முடிவனவாம்.
இவ்வினையெச்சம், எதிர்காலச் சொல்லையே முடிக்குஞ் சொல்லாகக் கொள்ளும். இவ்வினையெச்சத்தால் உணரப்படுந் தொழில், ஒருதலையாகவே சொல்லுவான். சொற்குப் பின்னிகழ்வதாயும், முடிக்குஞ்சொல்லால் உணரப்படுந் தொழிற்குக் காரணமாகமுன்னிகழ்வதாயும் உள்ளது; ஆதலால், இவ்வினையெச்சம் எதிhடகாலம் பற்றிக் காரணப்பொருளில் வருவதாயிற்று. ஒருதலை - துணிவு.
(உதாரணம்)
இன் யாணுண்ணி னுவப்பேன்
உண்ணிற் பசிதீரும் தன்கரு பிறகரு
ஆல் நீ வந்தால் வாழ்வாய்
நீ வந்தான் யான் வாழ்வேன் தன்கரு பிறகரு
கால் நீ கற்றக்காலுவப்பாய்
உண்டக்காற் பசிதீரும் தன்கரு பிறகரு
கடை நல்வினை தானுற்றக் கடையுதவும்
நல்வினை தானுற்றக்கடைத் தீவினை வராது தன்கரு பிறகரு
வழி நல்வினை தானுற்ற வழியுதவும்
நல்வினை தானுற்றவழித் தீவினை வராது தன்கரு பிறகரு
இடத்து நல்வினை தானுற்றவிடத்துதவும்
நல்வினை தானுற்றவிடத்துத் தீவினைவராது தன்கரு பிறகரு
உம் உண்டலு முவப்பாய்
உண்டலும் பசி தீரும் தன்கரு பிறகரு
வந்தால் என்பது துச்சாரியை பெற்றது. உண்டக்கால் என்பது துச்சாரியையும் அகரச்சாரியையும் பெற்றது. உற்றக்கால், உற்றக்கடை, உற்றவழி, உற்றவிடத்து என்பன அகரச்சாரியை பெற்றன. உண்டலும் என்பது துச்சாரியையும் அல்லுச் சாரியையும் பெற்றது.
உண்பானேல் உண்பானெனின், உண்பானாயின், உண்பானேனும் என, முற்று வினைகள், ஏல், எனின், ஆயின், ஏனும், என்னும் நான்கனோடும் இயைந்து, ஒரு சொன்னீர் மைப்பட்டுச் செயின் என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சங்களாய் வருமெனவும் அறிக.
276. எதிர்மறைத் தெரிநிலை வினையெச்சங்கள் எதிர்மறை ஆகாரவிடைநிலையோடு உ, மல், மே, மை, மைக்கு, கால், கடை, வழி, இடத்து என்னும் விகுதிகளைப் பெற்று வருவனவாம்.
செய்யாது என்பது செய்து, செய்பு, செய்யா, செய்யூ என்பவற்றிற்கு, எதிர்மறையாம். செய்யாது என்பதிலே தகரம் எழுத்துப்பேறு. செய்யாது என்பது, செய்கலாது, செய்கிலாது என, அல் இல், என்னும் இடைநிலைகளை ஆகாரச்சாரியையோடு பெற்றும் வரும்.
செய்யாமல் என்hது, செய என்பதற்கு எதிர்மறையாம்.
செய்யாமல், செய்யாமே, செய்யாமை, செய்யாமைக்கு என்னும் நான்கும், செயற்கு, செய்யிய, செய்யியர் என்பவற்றிற்கும், செயற்கு என்பது படவருஞ் செயவேனெச்சத்திற்கும் எதிர்மறையாம்.
செய்யாக்கால், செய்யாக்கடை, செய்யாவழி, செய்யாவிடத்து என்னும் நான்கும், செயின் என்பதற்கும், அப்பொருள்பட வருவனவாகிய செய்தால், செய்தக்கால், செய்தக்கடை, செய்தவழி, செய்தவிடத்து என்பனவற்றிற்கும் எதிர்மறையாம்.
(உதாரணம்)
விதிவினை யெச்சம் மறைவினையெச்சம்
உண்டு வந்தான் உண்ணாது வந்தான்
மழை பெய்யப் பயிர் தழைத்தது மழை பெய்யாமற் பயிர் வாடிற்று
இங்கே பெய்யாமல் என்பதற்கு
பெய்யாமையால் என்பது பொருள்
அவன் காணவந்தேன்
அவன் காணாமல் வந்தேன்.
இங்கே காணாமல் என்பதற்குக்
காணாதிருக்க என்பது பொருள்.
நீ வீடெய்தற்கு வணங்கு
நீ நரகெய்தாமல் வணங்கு
நீ நரகெய்தாமே வணங்கு
நீ நரகெய்தாமை வணங்கு
நீ நரகெய்தாமைக்கு வணங்கு
இஙகே எய்தாமல் என்பது முதலிய
நான்கிற்கும் எய்தாதொழியும் பொருட்டு
என்பது பொருள்
யானுணற்கு விதித்தான் யானுண்ணாமல் விதித்தான்
யானுண்ணாமே விதித்தான்
யானுண்ணாமை விதித்தான்
யானுண்ணாமைக்கு விதித்தான்
இங்கே உண்ணாமல் என்பது முதலிய
நான்கிற்கும் எய்தாதொழியும் பொருட்டு
என்பது பொருள்
யானுண்ணின்
மகிழ்வென் யானும்ணாக்கான் மகிழேன்
யானும்ணாக்கடை மகிழேன்
யானும்ணாவழி மகிழேன்
யானும்ணாவிடத்து மகிழேன்
இங்கே உண்ணாக்கால் என்பது முதலிய
நாந்கிற்கும் உண்ணாதொழியின் என்பது
பொருள்
உண்ணிற்
பசிதீரும் உண்ணாக்காற் பசி தீராது
உண்ணாக்கடை பசி தீராது
உண்ணாவழிப் பசி தீராது
உண்ணாவிடத்து பசி தீராது
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 28 | 29 | 30 | 31 | 32 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

