புறநானூறு - 98. வளநாடு கெடுவதோ!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை.
துறை: அரச வாகை. திணை: வஞ்சியும், துறை; கொற்றவள்ளையுமாம்.
முனைத் தெவ்வர் முரண் அவியப் பொர்க் குறுகிய நுதி மருப்பின் நின் இனக் களிறு செலக் கண்டவர் மதிற் கதவம் எழுச் செல்லவும், பிணன் அழுங்கக் களன் உழக்கிச் |
5 |
செலவு அசைஇய மறுக் குளம்பின் நின் இன நன்மாச் செயக் கண்டவர் கவை முள்ளின் புழை யடைப்பவும், மார்புறச் சேர்ந்து ஒல்காத் தோல் செறிப்பில் நின்வேல் கண்டவர் |
10 |
தோள் கழியொடு பிடி செறிப்பவும், வாள் வாய்த்த வடுப் பரந்த நின் மற மைந்தர் மைந்து கண்டவர் புண்படு குருதி அம்பு ஒடுக்கவும் நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென, |
15 |
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும் சுற்றத்து அனையை; ஆகலின்,போற்றார் இரங்க விளிவது கொல்லோ; வரம்பு அணைந்து இறங்குகதிர் அலம்வரு கழனிப், பெரும்புனல் படப்பை, அவர் அகன்றலை நாடே; |
20 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 96 | 97 | 98 | 99 | 100 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 98. வளநாடு கெடுவதோ!, கண்டவர், இலக்கியங்கள், நின், புறநானூறு, கெடுவதோ, வளநாடு, பகைவர், தோல்கவசம், திணை, எட்டுத்தொகை, சங்க, வாகை, துறை