முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 96. அவன் செல்லும் ஊர்!
புறநானூறு - 96. அவன் செல்லும் ஊர்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் மகன் பொகுட்டெழினி.
திணை : பாடாண்.
துறை: இயன் மொழி.
அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின், திரண்டுநீடு தடக்கை, என்னை இளையோற்கு இரண்டு எழுந் தனவால், பகையே; ஒன்றே, பூப்போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி, நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே, |
5 |
விழவு இன்று ஆயினும், படு பதம் பிழை யாது, மைஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க் கைமான் கொள்ளு மோ? என உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 94 | 95 | 96 | 97 | 98 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 96. அவன் செல்லும் ஊர்!, அவன், செல்லும், இலக்கியங்கள், புறநானூறு, இரண்டு, ஒன்றே, துறை, அதியமான், சங்க, எட்டுத்தொகை, மகன்