புறநானூறு - 91. எமக்கு ஈத்தனையே!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : தும்பை.
துறை: வாழ்த்தியல்.
வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார் களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை, ஆர்கலி நறவின், அதியர் கோமான் போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி! பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி |
5 |
நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப் பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது, ஆதல் நின்னகத்து அடக்கிச், |
10 |
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 89 | 90 | 91 | 92 | 93 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 91. எமக்கு ஈத்தனையே!, எமக்கு, ஈத்தனையே, இலக்கியங்கள், அதியர், புறநானூறு, கொண்டவன், வென்ற, சிவபெருமான், நீண்டநாள், சாகாமல், கொண்ட, பால், அஞ்சி, எட்டுத்தொகை, ஏந்தி, கோமான், சங்க, பெருமலை