முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 50. கவரி வீசிய காவலன்!
புறநானூறு - 50. கவரி வீசிய காவலன்!
பாடியவர்: மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.
திணை:பாடாண்.
துறை: இயன் மொழி.
குறிப்பு: அறியாது முரசுகட்டிலில் ஏறியவரைத் தண்டம் செய்யாது துயில் எழுந் துணையும் கவரிகொண்டு வீசினன் சேரமான்; அது குறித்துப் புலவர் பாடிய செய்யுள் இது.
மாசற விசித்த வார்புஉறு வள்பின் மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார், பொலங்குழை உழிஞையொடு, பொலியச் சூட்டிக், குருதி வேட்கை உருகெழு முரசம் |
5 |
மண்ணி வாரா அளவை, எண்ணெய் நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை அறியாது ஏறிய என்னைத் தெறுவர, இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை அதூஉம் சாலும், நற் றமிழ்முழுது அறிதல்; |
10 |
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின் மதனுடை முழவுத்தோள் ஓச்சித், தண்ணென வீசி யோயே; வியலிடம் கமழ, இவன்இசை உடையோர்க்கு அல்லது, அவணது உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை |
15 |
விளங்கக் கேட்ட மாறுகொல்: வலம்படு குருசில்! நீ ஈங்குஇது செயலே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 48 | 49 | 50 | 51 | 52 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 50. கவரி வீசிய காவலன்!, கவரி, இலக்கியங்கள், புலவர், அறியாது, முரசுக்கட்டில், வீசிய, காவலன், புறநானூறு, அழகுபடுத்தியது, உலகத்தில், வந்து, சேரமான், எட்டுத்தொகை, சங்க, மருங்குல், எண்ணெய்