முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 393. பழங்கண் வாழ்க்கை!
புறநானூறு - 393. பழங்கண் வாழ்க்கை!
பாடியவர்: நல்லிறையனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பாடாண்.
துறை: கடைநிலை.
பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கைக் |
5 |
வள்ளன் மையின்எம் வரைவோர் யார்? என; உள்ளிய உள்ளமொடு உலைநசை துணையா, உலகம் எல்லாம் ஒருபாற் பட்டென, மலர்தார் அண்ணல்நின் நல்லிசை உள்ளி, ஈர்ங்கை மறந்தஎன் இரும்பேர் ஒக்கல் |
10 |
கூர்ந்தஎவ் வம்வீடக், கொழுநிணம் கிழிப்பக், கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த மூடைப் பண்டம் மிடைநிறைந் தன்ன, வெண்நிண மூரி அருள, நாளுற ஈன்ற அரவின் நாவுருக் கடுக்கும்என் |
15 |
தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப், போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன, அகன்றுமடி கலிங்கம் உடீஇச், செல்வமும் கேடின்று நல்குமதி, பெரும! மாசில் மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
20 |
ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடிக், கோடை யாயினும் கோடி . . . . காவிரி புரக்கும் நன்னாட்டுப் பொருந! வாய்வாள் வளவன் வாழ்க! எனப் பீடுகெழு நோன்தாள் பாடுகம் பலவே. |
25 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 391 | 392 | 393 | 394 | 395 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 393. பழங்கண் வாழ்க்கை!, பழங்கண், இலக்கியங்கள், வாழ்க, புறநானூறு, வாழ்க்கை, நல்கவேண்டும், காவிரி, புலவர், உண்ணவேண்டும், அப்படிப்பட்ட, போல், ஆடுமகள், வீடு, பருத்தி, வளவன், சங்க, எட்டுத்தொகை, கூமை, யார், பகன்றைப், மலர்தார், செல்வமும்