முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 385. காவிரி அணையும் படப்பை!
புறநானூறு - 385. காவிரி அணையும் படப்பை!
பாடியவர்: கல்லாடனார்.
பாடப்பட்டோன்: அம்பர் கிழான் அருவந்தை.
திணை: பாடாண்.
துறை: வாழ்த்தியல்.
வெள்ளி தோன்றப், புள்ளுக்குரல் இயம்ப, புலரி விடியல் பகடுபல வாழ்த்தித், தன்கடைத் தோன்றினும் இலனே; பிறன் கடை, அகன்கண் தடாரிப் பாடுகேட்டு அருளி, வறன்யான் நீங்கல் வேண்டி, என் அரை |
5 |
நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து, வெளியது உடீஇ, என் பசிகளைந் தோனே; காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை நெல்விளை கழனி அம்பர் கிழவோன். நல்அரு வந்தை, வாழியர்; புல்லிய |
10 |
வேங்கட விறல்வரைப் பட்ட ஓங்கல் வானத்து உறையினும் பலவே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 383 | 384 | 385 | 386 | 387 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 385. காவிரி அணையும் படப்பை!, காவிரி, படப்பை, இலக்கியங்கள், அணையும், அம்பர், அவன், புறநானூறு, புலவர், வேங்கட, வாழவேண்டும், அருவந்தை, எட்டுத்தொகை, சங்க, தடாரிப்