முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 383. வெள்ளி நிலை பரிகோ!
புறநானூறு - 383. வெள்ளி நிலை பரிகோ!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: பெயர் தெரிந்திலது
(கடுந்தேர் அவியனென ஒருவனை உடையேன்' என்று குறித்தது கொண்டு,அவனைப் பாடியதாகக் கொள்ளலும் பொருந்தும்)
திணை: பாடாண்.
துறை: கடைநிலை.
ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து, |
5 |
அருங்கடி வியன்நகர்க் குறுகல் வேண்டிக், கூம்புவிடு மென்பிணி அவிழ்த்த ஆம்பல், தேம்பாய் உள்ள தம்கமழ் மடர் உளப், பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின் கழைபடு சொலியின் இழை அணி வாரா. |
10 |
ஒண்பூங் கலிங்கம் உடீ இ, நுண்பூண் வசிந்துவாங்கு நுசுப்பின், அவ்வாங்கு உந்திக், கற்புடை மடந்தை தற்புறம் புல்ல, எற் பெயர்ந்த நோக்கி . . . . . . . . . கற்கொண்டு, |
15 |
அழித்துப் பிறந்ததென னாகி, அவ்வழிப், பிறர், பாடுபுகழ் பாடிப் படர்பு அறி யேனே; குறுமுலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி, நரைமுக வூகமொடு, உகளும், சென. . . . . . . . . கன்றுபல கெழீ இய |
20 |
கான்கெழு நாடன், நெடுந்தேர் அவியன், என ஒருவனை உடையேன் மன்னே, யானே; அறான், எவன் பரிகோ, வெள்ளியது நிலையே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 381 | 382 | 383 | 384 | 385 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 383. வெள்ளி நிலை பரிகோ!, அவியன், இலக்கியங்கள், வெள்ளி, பரிகோ, புறநானூறு, நிலை, அவன், முழக்கினேன், போனால், எனக்கென்ன, தோல், எங்கே, போலவும், முளைத்து, நுண்ணிய, ஆம்பல், நப்பசலையார், சங்க, எட்டுத்தொகை, ஒருவனை, அவனைப், பாம்பு, சேவல், இருக்கும்போது