முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 378. எஞ்சா மரபின் வஞ்சி!
புறநானூறு - 378. எஞ்சா மரபின் வஞ்சி!
பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்.
பாடப்பட்டோன்: சோழன் செரப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி.
திணை: பாடாண் .
துறை: இயன்மொழி.
தென் பரதவர் மிடல் சாய, |
5 |
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப், பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என் அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி, எஞ்சா மரபின் வஞ்சி பாட, எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல, |
10 |
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந் தோனே; அது கண்டு, இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல், விரல்செறி மரபின செவித்தொடக் குநரும், செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும், |
15 |
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும், கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை, நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தா அங்கு, |
20 |
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே, இருங்குளைத் தலைமை எய்தி, அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 376 | 377 | 378 | 379 | 380 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 378. எஞ்சா மரபின் வஞ்சி!, இலக்கியங்கள், எஞ்சா, வஞ்சி, மரபின், குநரும், மாட்டிக்கொண்டனர், மரபின, அவன், வேந்தன், புறநானூறு, வழங்கினான், எட்டுத்தொகை, விரலில், காதில், இடுப்பில், அரிய, கழுத்தில், கேட்ட, சோழன், கோயில், சங்க, வஞ்சிப், பாடினார், புலவர், அல்ல