முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 376. கிணைக்குரல் செல்லாது!
புறநானூறு - 376. கிணைக்குரல் செல்லாது!
பாடியவர்: புறத்திணை நன்னாகனார்.
பாடப்பட்டோன்: ஓய்மான் நல்லியாதன்.
திணை:பாடாண்.
துறை: இயன்மொழி.
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப் பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங்கு அந்தி சிறுநனி பிறந்த பின்றைச், செறிபிணிச் சிதாஅர் வள்பின்என் தடாரி தழீஇப், பாணர் ஆரும் அளவை, யான்தன் |
5 |
யாணர் நல்மனைக் கூட்டு முதல் நின்றனென்! இமைத்தோர் விழித்த மாத்திரை, ஞெரேரெனக், குணக்கு எழு திங்கள் கனைஇருள் அகற்றப், பண்டுஅறி வாரா உருவோடு, என் அரைத் தொன்றுபடு துளையொடு பருஇழை போகி, |
10 |
நைந்துகரை பறைந்தஎன் உடையும் நோக்கி, விருந்தினன் அளியன், இவன் எனப், பெருந்தகை நின்ற முரற்கை நீக்கி, நன்றும் அரவுவெகுண் டன்ன தேறலொடு. சூடுதருபு, நிரயத் தன்னஎன் வறன்களைந் தன்றே, |
15 |
இரவி னானே, ஈத்தோன் எந்தை; அற்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும், இரப்பச் சிந்தியேன், நிரப்படு புணையின்; உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்; நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெ னாகி, |
20 |
ஒருநாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை, ஞாங்கர் நெடுமொழி பயிற்றித், தோன்றல் செல்லாது, என் சிறுகிணைக் குரலே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 374 | 375 | 376 | 377 | 378 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 376. கிணைக்குரல் செல்லாது!, இலக்கியங்கள், செல்லாது, கிணைக்குரல், புறநானூறு, போக்கினான், இரவில், தந்தான், பாய்வது, கிழிந்த, புலவர், விருந்தினன், சங்க, எட்டுத்தொகை, அந்தி, சிறுநனி, அளக்கும், இரவலர்