முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 351. தாராது அமைகுவர் அல்லர்!
புறநானூறு - 351. தாராது அமைகுவர் அல்லர்!
பாடியவர்: மதுரைப் படைமங்க மன்னியார்
திணை: காஞ்சி
துறை: மகட்பாற் காஞ்சி
படுமணி மருங்கின் பணைத் தாள் யானையும், கொடிநுடங்கு மிசைய தேரும், மாவும், படைஅமை மறவரொடு, துவன்றிக் கல்லெனக், கடல்கண் டன்ன கண்அகன் தானை வென்றுஎறி முரசின் வேந்தர், என்றும், |
5 |
வண்கை எயினன் வாகை அன்ன இவள்நலம் தாராது அமைகுவர் அல்லர்; என்ஆ வதுகொல் தானே- தெண்ணீர்ப் பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை தேம்கொள் மருதின் பூஞ்சினை முனையின், |
10 |
காமரு காஞ்சித் துஞ்சும் ஏமம்சால் சிறப்பின், இப் பணைநல் லூரே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 349 | 350 | 351 | 352 | 353 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 351. தாராது அமைகுவர் அல்லர்! , தாராது, இலக்கியங்கள், அல்லர், அமைகுவர், வேந்தர், வாகை, காஞ்சி, என்ன, புறநானூறு, அமைதி, தெரியும், கொண்ட, இவளது, மரத்தில், ஆகுமோ, விடமாட்டார்கள், என்னும், மேய்ந்த, தானை, சங்க, எட்டுத்தொகை, எயினன், பொய்கை, இவள், நாரை, செவ்வரி, தராவிட்டால்